Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 12.03.2010

விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூர்
, மார்ச் 11: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற , காலாவதியான உணவுப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகள், விற்பனையகங்களில் தரமற்ற, காலாவதியான பொருள்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் வெங்கடாஜலம், பன்னீர்செல்வம், ராகவன், ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கடை வீதி, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் திடீர் ஆய்வு நடத்தி,னர்.

இந்த ஆய்வில், காலாவதியான கடலை மாவு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, சிப்ஸ், முருக்கு வகைகள், உணவு வகைகள், உணவு எண்ணை உள்ளிட்ட சுமார் 100 கிலோ மதிப்பிலான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், தரமற்ற முருக்கு வகைகளை, சில்லரை விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறியது:

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் உத்தரவின் பேரில், பெரம்பலூர் நகரில் ஆய்வு மேற்கொண்டு, கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த- உணவில் சேர்க்கத் தகுதியற்ற, உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மளிகைக் கடைகளில் பாத்திரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், கடைகளில் காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Last Updated on Friday, 12 March 2010 09:15