Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி 15.03.2010

ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு நகராட்சி எச்சரிக்கை

பண்ருட்டி, மார்ச் 14: இறைச்சிக்கான ஆடுகளை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து முத்திரையிட்ட பின்னரே இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் என பண்ருட்டி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

÷பண்ருட்டி இரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன ஆடு வெட்டும் நிலையம் செயல்பாட்டில் உள்ளது. கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் முத்திரையிடப்பட்ட ஆட்டு இறைச்சிகளையே நகர எல்லைக்குள் விற்பனை செய்ய வேண்டும். பரிசோதனை செய்யப்படாமல் விற்பனை செய்யப்படும் ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Last Updated on Monday, 15 March 2010 10:03