தினமலர் 17.03.2010
மளிகை கடையில் ஆய்வு
பொன்னமராவதி: பொன்னமராவதியில் மளிகை கடை, பருப்பு மில் உள்ளிட்ட மொத்த வியாபார கடைகளில் கலப்பட பொருட்கள் விற்பனை செய்கின்றனரா என்று சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், உத்தமன், ராமலிங்கம், ரவீந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றின் உணவு மாதிரிகள் எடுத்து கிண்டி அரசு பருப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும் கலப்பட பருப்பு வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.