Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரியாபட்டி கடைகளில் உணவு ஆய்வாளர்கள் சோதனை

Print PDF

தினமணி 18.03.2010

காரியாபட்டி கடைகளில் உணவு ஆய்வாளர்கள் சோதனை

காரியாபட்டி, மார்ச் 17: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சில கடைகளில் உணவு ஆய்வாளர்கள் உணவுப் பண்டங்களை பரிசோதனை செய்தனர்.

உணவு ஆய்வாளர்களான போஸ், முகம்மது இஸ்லாம்ஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ் ஆகியோர், உணவு கலப்பட ஆய்வு மற்றும் மாதிரி உணவு சேகரித்தல் பணிகளை மேற்கொண்டனர். அதன்படி, பலசரக்குக் கடை ஒன்றில் கடலைப் பருப்பும், சூப்பர் மார்க்கெட்டில் துவரம் பருப்பும் மாதிரி எடுத்து, சென்னை உணவு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.