தினமணி 22.03.2010
தட்டார்மடம் கடைகளில் சுகாதார துறையினர் சோதனை
பெரியதாழை : தட்டார்மடம் பகுதியில் சுகாதார துறையினரின் தனிப்படையினர் வியாபார கடைகளில் சோதனை நடத்தினர்.
தட்டார்மடம், இடைச்சிவிளை, பூச்சிக்காடு, நடுவக்குறிச்சி மற்றும் முதலூர் பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. சுகாதாரதுறை துணை இயக்குநர் உமா உத்திரவின் பேரில், வட்டார சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ரெஜீனால்டு, மந்திரதாசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இப்பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். உணவு பொருட்களில் கலப்படம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. வியாபார கடைகளில் உள்ள கடலைபருப்பு, துவரம்பருப்பு போன்ற உணவு பொருட்களை மாதிரி எடுத்து கலப்படம் உள்ளதா? என்று கண்டறிய பகுப்பாய்வு கூடத்திற்கு சுகாதார துறையினர் அனுப்பிவைத்தனர். மேலும் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளது என்று தெரிந்தால் கலப்பட தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார தனிப்படையினர் எச்சரித்துள்ளனர்.