Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முத்திரையில்லா ஆட்டு இறைச்சி பறிமுதல்

Print PDF

தினமணி 22.03.2010

முத்திரையில்லா ஆட்டு இறைச்சி பறிமுதல்

பண்ருட்டி,மார்ச் 21: பண்ருட்டி நகர பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் முத்திரையிடப்படாத ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்கெட்டில் நவீன ஆட்டு இறைச்சி அறுவைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்பவர்கள் முத்திரை இடப்பட்ட இறைச்சிகளையே விற்பனை செய்ய வேண்டும். முத்திரையிடப்படாத இறைச்சிகளை விற்பனை செய்தால் இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி சில நாள்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை ஆணையர் கே.உமாமகேஸ்வரி தலைமையில், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் ஆர்.சுதாகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கொளஞ்சியப்பன், கே.பாண்டியன், ஓட்டுநர் ரவி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முத்திரையிடப்படாமல் கடையில் விற்பனை செய்த இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

Last Updated on Monday, 22 March 2010 10:27