Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுகை நகராட்சியில் ஆடுவதை சாலை நவீன மயம்

Print PDF

தினமலர் 01.04.2010

புதுகை நகராட்சியில் ஆடுவதை சாலை நவீன மயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அம்பாள்புரம் 4ம்வீதியில் ஆடுவதை சாலை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுகை அம்பாள்புரம் 4ம்வீதியில் இயங்கி வந்த ஆடுவதை சாலை தற்போது நவீனமயமாக மாற்றப்பட்டு வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் இயங்குகிறது. எனவே நகரிலுள்ள அனைத்து ஆட்டு இறைச்சி கடைகளின் உரிமையாளர்களும் ஆடுவதை சாலையில் மட்டுமே ஆடுகளை அறுத்து நகராட்சி முத்திரை இடப்பட்ட பின்னரே விற்பனை செய்ய வேண்டும். நகராட்சி முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:32