Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆடு அறுக்கும் இடம் மாறினால் ஆட்டை இழக்க வேண்டியது வரும் : பினாயில் மூலம் செக் வைக்க அதிரடி

Print PDF

தினமலர் 01.04.2010

ஆடு அறுக்கும் இடம் மாறினால் ஆட்டை இழக்க வேண்டியது வரும் : பினாயில் மூலம் செக் வைக்க அதிரடி

தூத்துக்குடி : காதாரமற்ற முறையில் மாநகராட்சி ஆடறுக்கும் இடத்தை தவிர வேறு இடத்தில் ஆடுகள் அறுக்கப்பட்டால் அதன் மேல் பினாயில் ஊற்றி அழிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு உணவு பண்டங்கள் விற்பனை செய்ய வேண்டும். ஈ மொய்க்கும் அள விற்கு உணவு பண்டங்கø ள திறந்து வைக்க கூடாது. கண்ணாடி தாள் போட்டு மூடி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அவ்வப்போது சோதனைகளும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் அனுமதி இல்லாமல் ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சிகள் மக்கள் தெரியும் வகையில் அப்படியே கொண்டு செல்லப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து இதில் நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து கமிஷனர் குபேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அறுக்கப்படும் ஆடுகளை மாநகராட்சி ஆடு அறுக்கப்படும் இடத்தில் தான் அறுக்க வேண்டும். அறுப்பதற்கு முன்பு கால்நடை ஆஸ்பத்திரி டாக்டரிடம் தகுதி சான்று பெற வேண்டும். ஆடுகளை அறுக்கும் பணி முடிந்தவுடன் விற்பனைக்காக எடுத்து செல்லப்படும் ஆட்டு இறைச்சியின் இடது தொடையில் மாநகராட்சியின் முத்திரை இடப்பட வேண்டும். விற்பனைக்காக எடுத்துச் செல்லும் இறைச்சியை பாதுகாப்பா ன கன்டெய்னரில் பொதுமக்கள் பார்வை படாதவாறு எடுத்துச் செல்ல வேண்டும். ஆடுகள் அறுக்கும் இ டம் தவிர வேறு இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி ஆடுகள் அறுக்கப்பட்டால் அவை பினாயில் ஊற்றி அழிக்கப்படும். சுகாதாரமற்ற, நோய்வாய்பட்ட ஆடுகளையோ, வயிற்றில் குட்டியுடன் உள்ள ஆடுகளையோ அறுக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:44