தினமலர் 01.04.2010
மருத்துவ காப்பீட்டு அட்டை பயனாளிகளுக்கு வழங்கல்
வாணியம்பாடி:வாணியம்பாடி நகராட்சி பகுதியில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயனாளிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்த பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அம்பூர்பேட்டை பகுதியில் உதவும் உள்ளங்கள் அலுவலக வளாகத்தில் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், அலுவலர் அஜிஸ், துப்புரவு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினர்.ஒவ்வொரு வார்டிலும் 2 நாட்கள் அடையாள அட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.