Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலக சுகாதார தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி 08.04.2010

உலக சுகாதார தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவை, ஏப். 7: உலக சுகாதார தினத்தை ஒட்டி, கோவை மாநகராட்சியில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது (படம்).

÷வடக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியை மேயர் ஆர்.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கிவைத்தார். துணை மேயர் நா.கார்த்திக், சுகாதாரக்குழுத் தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷..சி.பூங்கா வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

÷துணை ஆணையர் வே.சாந்தா, கவுன்சிலர்கள் மெகர்நிசா, சாந்தகுமாரி, விஜயலட்சுமி, ஹேமலதா, நகர்நல உதவி அலுவலர் ஆர்.சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:29