Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 09.04.2010

காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கடைகளில் விற்பனை செய்த காலாவதியான குளிர்பான பாட்டில்களை நகராட்சி பொது சுகாதார பிரிவினர் பறிமுதல் செய்தனர். விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் தது. அதனையடுத்து விருத் தாசலம் பஸ்நிலையம், ஜங்ஷன்ரோடு ஆகிய பகுதிகளில் குளிர் பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி பொது சுகாதார பிரிவினர் துப்புரவு அலுவலர் பரமசிவம் தலைமையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான குளிர்பான பாட்டில் களை 200க்கும் மேல் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Friday, 09 April 2010 07:50