தினமலர் 12.04.2010
சுகாதாரம் பாதுகாப்பு கமிஷனருக்கு மனு
ஊட்டி : ஊட்டி மெயின் பஜார் பகுதியில், சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி இந்து முன்னணி அமைப்பாளர் ஹரிகுமார், நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு: ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, தற்போது நடந்து வருகிறது. தேர் ஊர்வலம், லோயர் பஜார், மின்வாரிய அலுவலகம், மெயின் பஜார், ஐந்துலாந்தர், கமர்சியல் சாலை வழியாக மீண்டும் கோவிலை அடையும். தேர்பவனி வரும் வீதிகளில், குப்பை மற்றும் சாலையோரம் இறைச்சிக் கழிவு கொட்டப்படுகிறது. மெயின்பஜார் சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, இங்கு குப்பைத் தொட்டிகள் வைப்பதுடன், சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஹரிகுமார் கூறியுள்ளார்.