தினமலர் 13.04.2010
தரமற்ற உணவுகளை தயாரித்த கடைகள் அகற்றம்!: கோயம்பேடு நடைப்பாதை கடைகள் மீது அதிரடி
கோயம்பேடு: கோயம்பேடு மார்க் கெட்டைச் சுற்றி, தரமற்ற உணவு மற்றும் குளிர் பானம் விற்கும் நடைபாதை கடைகளை, நேற்று மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அதிரடியாக அகற்றினர்.கோயம்பேடு மார்க் கெட்டிற்கு பூ, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட் களை மொத்தமாக வாங்குவதற்காக, நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்துச் செல்கின்றனர்.இவர்களை குறி வைத்து, மார்க்கெட்டைச் சுற்றியுள்ள சாலையோரங் களில், 100க்கும் மேற்பட்ட நடைபாதைகள் இயங்குகின்றன.குறிப்பாக இவர்கள் கொடுக்கும் தரமற்ற உணவுகளை, மார்க்கெட் டிற்கு வந்து செல்பவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.தற்போது கோடைக் காலம் தொடங்கி விட்டதால், தரமற்ற பழச்சாறு கடைகள் நடைபாதை முழுவதும் அதிகமாக முளைத்து விட்டன.இதனை தடுக்கும் விதமாக, தரமற்ற உணவுகளை வழங்கும் கடைகளை அகற்ற மாநகராட்சி சுகாதாரத்துறையின் நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று மதியம் 12 மணிக்கு துவங்கி, இரண்டு மணி நேரம் நடந்த நடவடிக்கையில் மார்க் கெட்டைச் சுற்றி இயங்கிய தரமற்ற உணவு மற்றும் பழச்சாறு விற்கும் 18 கடைகளை அப்புறப்படுத் தினர்.அவர்களிடமிருந்து தரமற்ற நிலையில் இருந்த பிரியாணி, பழச்சாறு, பழங்கள் உள்ளிட்டவை பெறப்பட்டது. இக்கடைகளை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட தள்ளுவண்டிகள், பாத்திரங்கள், பொருட்கள் உள்ளிட்டவைகளை லாரிகள் மூலம் கொண்டு சென்றனர்.மாநகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் உணவு ஆய்வாளர் சதாசிவம், உணவு ஆய்வாளர் மணிமாறன், சுகாதார ஆய் வாளர் முருகன் ஆகியோர் தலைமையிலான குழு வினர், கடைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.