தினமலர் 16.04.2010
நகர சுகாதார செவிலியர்கள் மண்டல செயற்குழு கூட்டம்
திருவண்ணாமலை: நகராட்சி, மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்கத்தின் வேலூர் மண்டல செயற்குழு கூட்டம் தி.மலையில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சீதாராமன் வரவேற்றார். நகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் குமரிமன்னன் உட்பட பலர் பேசினர். நகராட்சி ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் அரசு ஊழியர்களாக்க வேண்டும். சுகாதார துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகரில் சுகாதார பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் வகையில் சுகாதார பணிகளை தவிர தேர்தல் பணிகள் உட்பட இதர பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.