தினமணி 17.04.2010
நவீன இலவச கழிப்பறை திறப்பு
மதுரை, ஏப். 16: மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே டி.வி.எஸ். நிறுவனம் மூலம் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கழிப்பறையை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி முயற்சியால் மாநகரில் 10 இடங்களில் தனியார் பராமரிக்கும் இலவசக் கழிப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.
இந்த நிலையில், மேலும் ஒரு கழிப்பறை திருமலை நாயக்கர் மகால் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது. இதை மேயர் கோ.தேன்மொழி திறந்து வைத்துப் பேசுகையில், இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கழிப்பறை சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நல்ல முறையில் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் சீனிவாசன், துணைப் பொது மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.