Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர் 21.04.2010

டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

கோட்டூர்:கோட்டூர் பகுதியில் கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.பொது சுகாதாரம் மற்றும் நோய் மருந்துத்துறை சார்பில் கோட்டூர், திருமக்கோட்டை, திருவண்டுதுறை, விக்கிரபாண்டியம், சித்தமல்லி ஆகிய பகுதிகளில் டீக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கலப்பட தேயிலைத்தூள் கண்டுபிடிக்கப்பட்டு மாதிரி உணவு பகுப்பாய்விற்காக சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலைத்தூள் அழிக்கப்பட்டது.பின்னர் கடை உரிமையாளர்களுக்கு கலப்பட தேயிலைத்தூளை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கிரிசாமி, சுகாதார ஆய்வாளர்கள் வெள்ளைச்சாமி, ஜீவானந்தம் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர

Last Updated on Wednesday, 21 April 2010 06:36