தினமலர் 22.04.2010
சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு: உணவு பொருட்கள் பறிமுதல்
திண்டிவனம் : திண்டிவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருட் களை நகராட்சி பொதுசுகாதாரக்குழுவினர் பறிமுதல் செய்து அழித்தனர்.விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக் டர் கிருஷ்ணராஜ், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் முருகேசன் ஆகியோர் உத்தரவின் பேரில் நகராட்சி பொதுசுகாதார குழுவினர் திண்டிவனம் பகுதியில் நேற்று ஆய்வு மேற் கொண்டனர். செஞ்சி சாலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு பின்புறம் ஜெயராமன் என்பவருக் குச் சொந்தமான குடோனில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.அவர் தான் நடத்தி வந்த ரைஸ் மில்லை குடோனாக மாற்றி, அதில் பல்வேறு உணவுப் பொருட்களை இருப்பு வைத்து வந் துள்ளார். இதில் காலாவதியான 30 மூட்டை சிப்ஸ் வகைகள், 25 மூட்டை கோதுமை மாவு, குளிர் பானங்கள், டொமோட்டோ சாஸ், தக்காளி ஜாம் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள உணவுப் பொருட் களை அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்தனர். அவற்றை நகராட்சியின் துப்புரவு அலுவலர் பாலசந்தர், துப்புரவு ஆய் வாளர்கள் ராஜரத்தினம், சரவணன், ஜோதிபாசு உள்ளிட்ட குழுவினர் பறிமுதல் செய்து, பொதுசுகாதாரச் சட்டம்112ன் படி பறிமுதல் செய்து அழித்தனர்.