தினமணி 24.04.2010
சாத்தான்குளத்தில் இறைச்சி கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை
சாத்தான்குளம், ஏப். 23: சாத்தான்குளம் பகுதி இறைச்சி மற்றும் குளிர்பானக் கடைகளில் சுகாதாரத் துறையினர் திடீரென புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் பகுதியில் சுகாதார கேடு விளைக்கும் வகையில் இறைச்சியும் தரமற்ற நிலையில் குளிர்பானங்களும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் உமா உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயகணேஷ் ஆலோசனையின் படி வட்டார உணவு ஆய்வாளர் முத்துராஜா, சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர்செல்வதாஸ், மந்திரராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதன்கிழமை இங்குள்ள இறைச்சிகடைகள், மற்றும் குளிர்பானக் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலாவதி மற்றும் தயாரிப்பு தேதியினை அறிந்து குளிர்பானங்கள் அருந்த வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்