தினமணி 26.04.2010
சாக்கடையை சுத்தம் செய்த சுய உதவிக் குழுவினர்
பழனி, ஏப். 25: பழனி அடிவாரம் பகுதியில் ஆண்கள் சுய உதவிக் குழு சார்பில் சாக்கடைகள் தூர்வாறி சுத்தம் செய்யப்பட்டன.
பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் ஞாயிற்றுக்கிழமை சாக்கடைகள் தூர்வாறி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. எஸ்ஜேஎஸ்ஆர்ஒய் குறிஞ்சி ஆண்டவர் சுய உதவிக் குழுவினர் சுமார் 25 பேர் இப்பணியை மேற்கொண்டனர்.
இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது 27-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், துப்புரவு ஆய்வாளர் நெடுமாறன், துப்புரவு மேற்பார்வையாளர் காசி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபோன்ற சமூக சேவைகளில் இக்குழு தொடர்ந்து ஈடுபட உள்ளதாக குழுவின் தலைவர் முகமது தாரிக் ராஜா தெரிவித்தார்.