தினமலர் 26.04.2010
விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : மம்சாபுரத்தில் உணவு கலப்பட தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.பேரூராட்சி தலைவர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து கலப்பட உணவால் ஏற்படும் நோய்கள், தரமான உணவு பொருளை மக்களுக்கு வழங்க வேண்டியதின் அவசியத்தை பற்றியும் பேசினார். செயல் அலுவலர் சாம்ராஜ், உணவு பொருள் ஆய்வாளர் கருப்பையா, சுகாதார ஆய்வாளர் வேலு, வணிகர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர் அய்யனார் நன்றி கூறினார்.