Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழக்கரை பகுதிகளில் பவர் இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்படும்

Print PDF

தினமணி 29.04.2010

கீழக்கரை பகுதிகளில் பவர் இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்படும்

கீழக்கரை, ஏப். 28: கீழக்கரை பகுதிகளில் உள்ள குப்பைகள் பவர் இயந்திரம் மூலம் விரைவில் அகற்றப்படும் என்று நகராட்சி தலைவர் பஷீர் அஹமது தெரிவித்தார்.

குப்பைகளை அகற்றுவது தொடர்பாக நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அஹமது தலைமை வகித்தார். ஆணையர் சுந்தரம், கீழக்கரை வர்த்தக சங்கத் தலைவர் சுல்தான் ஹமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சித் தலைவர் கூறியது: நகராட்சியின் முக்கிய சாலைப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகளில் சேரும் குப்பைகளை சேகரித்து நகராட்சியின் குப்பை ஏற்றும் வாகனங்கள் காலை 8 மணிக்கு வரும்போது அகற்ற வேண்டும்.

மாலையில் சேகரிக்கும் குப்பைகளை மாலையில் வரும் குப்பை வாகனங்களில் அகற்ற வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்காக பவர் இயந்திரம் பொருத்திய (ஹைட்ராலிக்) வாகனம் வரவழைக்கப்படுகிறது.

இதன் மதிப்பு ரூ.18.5 லட்சம். இதன் மூலம் நகரின் பல பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 10 இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு பவர் கிரெய்ன் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் குப்பைகள் நிறைந்த தொட்டிகள் தூக்கிச் செல்லப்பட்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்படும் என்றார்.