Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொண்டியில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினமணி 29.04.2010

தொண்டியில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

திருவாடானை ஏப். 28: திருவாடானை தாலுகா தொண்டி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் அழிக்கப்பட்டன

தொண்டியில் சுமார் 30 கடைகளில் புதன்கிழமை வட்டார மருத்துவ அலுவலர் துறைச்சாமி தலைமையில் சுகாதார ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ரூ.1500 மதிப்புள்ள காலாவதியான தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் போன்ற பொருள்களைக் கண்டறிந்து அழித்தனர்.

மேலும் கடை உரிமையாளர்களுக்கு, இது போன்ற பொருள்களை விற்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது போன்ற பொருள்களை விற்க கூடாது என்று எச்சரித்தார்.

Last Updated on Thursday, 29 April 2010 10:27