தினமலர் 30.04.2010
காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் அழிப்புதொண்டி:தொண்டியில் காலாவதியான குடிநீர் பாக் கெட்டு கள் அழிக்கப்பட்டன.தொண்டி வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி தலைமையில், பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைக் கபட்டிருந்த, காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத குடிநீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டு அழிக்கபட்டன. டாக்டர் துரைசாமி கூறுகையில்,'' இது போன்ற பாக்கெட்டுகள் விற்பனை செய்வதன் மூலம் நோய் பரவும் . குடிநீர் பாக் கெட் வாங்கும் போது, தவணை தேதி குறிப் பிட்டுள்ளதா, கம் பெனி பெயர் உள்ளதா என பார்த்து வாங்கவேண்டும். முறைகேடாக விற்பனை செய்யும் கடைகாரர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் ,''என்றார்.