தினமலர் 03.05.2010
ஆலத்தம்பாடி கடைகளில் அயோடின் உப்பு சோதனை
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அயோடின் உப்பு சோதனை நடத்தப்பட்டது. கட்டிமேடு, அபிஷேக கட்டளை, பள்ளங்கோவில், நெடும்பலம், விளக்குடி, ஆலத்தம்பாடி, கச்சனம், திருத்தங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகைக்கடைகளில் உப்பில் அயோடின் கலந்துள்ளதா? என ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் புஷ்பா, தையல்நாயகி, தேவிகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், பழனியப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர