Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான உணவுப் பொருள் பறிமுதல்

Print PDF

தினமணி 03.05.2010

காலாவதியான உணவுப் பொருள் பறிமுதல்

கோவை, மே 2: கோவையில் காலாவதியான உணவுப் பொருள்கள் மாநகராட்சி அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

÷சென்னையில் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்த 2 நபர்களை போலீஸôர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, காலாவதியான உணவுப் பொருள்களை வைத்திருந்த குடோனுக்கு "சீல்' வைக்கப்பட்டது.

÷இந்நிலையில், கோவையில் உள்ள ஹோட்டல்களிலும், கடைகளிலும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, மாநகராட்சி நகர்நல உதவி அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் கிராஸ்கட் சாலையில் உள்ள பேக்கரி, ஹோட்டல், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

÷அதில், 3 கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், பெரும்பாலான உணவுப் பண்டங்களில் தயாரிக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்படவில்லை. சில உணவுப் பொருள்களில் காலாவதியாகும் தேதி திருத்தப்பட்டிருந்தது. அந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

÷இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

÷பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். ஆய்வு முடிவில் உணவுப் பொருள்கள் காலாவதியானது கண்டறியப்பட்டால், அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.