Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒட்டன்சத்திரத்தில் மூன்று வார்டுகளில் கழிப்பிட வசதி

Print PDF

தினமலர் 04.05.2010

ஒட்டன்சத்திரத்தில் மூன்று வார்டுகளில் கழிப்பிட வசதி

ஒட்டன்சத்திரம் : காந்திநகர்,வினோபாநகர் ஆகிய இடங்களுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் விரைவில் கழிப்பிட வசதி செய் யப்படும் என்று ஒட்டன் சத்திரம் பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், விநோபாநகர் (வார்டுகள் 5,6,7) ஆகிய இடங்களில் கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் அலுவலர் ஜெயக்கொடி பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி கூறுகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விரைவில் அந்த வார்டுகளில் கழிப் பிட வசதி செய்து தரப்படும், இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Tuesday, 04 May 2010 07:53