Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கடையநல்லூரில் கொசுக்களை கட்டுப்படுத்த கழிப்பறை குழாய்களில் வலை கட்டும் பணி

Print PDF

தினமணி 24.02.2010

கடையநல்லூரில் கொசுக்களை கட்டுப்படுத்த கழிப்பறை குழாய்களில் வலை கட்டும் பணி

கடையநல்லூர், பிப். 23: கடையநல்லூரில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து கொசுக்களைக் கட்டுப்படுத்த கழிப்பறைகளின் குழாய்களில் வலை கட்டும் பணி நடைபெறுகிறது.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூர் பகுதியில் 2 மாதங்களாக பரவி வந்த காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள்தோறும் அபேட் மருந்து ஊற்றும் பணியும், முதிர் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும், 18,000 வலைகள் வாங்கப்பட்டு நகரிலுள்ள கழிப்பறைக் குழாய்கள், மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டிகளின் குழாய்களை மூடும் பணி சுகாதார ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையா பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:30
 

கலப்பட டீ தூள் விற்றால் சட்ட நடவடிக்கை

Print PDF

தினமணி 24.02.2010

கலப்பட டீ தூள் விற்றால் சட்ட நடவடிக்கை

அரவக்குறிச்சி
, பிப். 23: கலப்பட டீ தூள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதாசிவம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், டீக்கடைகளில் டீத்தூள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சுகாதாரத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.

அங்கிருந்த டீத்தூள் பாக்கெட்களில் விற்பனை உரிமம், டீத்தூளின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 26 கடைகளில் நடத்திய ஆய்வில், 12 கடைகளில் இருந்த டீத்தூளை மாதிரிக்காக எடுத்துச் சென்றனர். கலப்பட டீத்தூள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர் சாந்திகண்ணன், டாக்டர் கௌதமன், சுகாதார ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:25
 

கலப்படம்: சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை

Print PDF

தினமணி 24.02.2010

கலப்படம்: சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை

காஞ்சிபுரம், பிப். 23: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவில் கலப்பட பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து சுகாதாரத் துறையினர் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

÷சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் அவர்கள் திடீர் ஆய்வு செய்தனர். ÷

இரு தேயிலை பொருள்களின் கிடங்குகள், 8 மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் 15 தேநீர் கடைகள் ஆகிய இடங்களில் இவர்கள் ஆய்வு நடத்தினர்.

÷தேயிலை தயாரிப்பு, தொழிற்சாலை விவரம், தயார் செய்யப்பட்ட நாள் மற்றும் காலாவதியாகும் நாள் முதலியவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வில் கண்காணிக்கப்பட்டன.

÷
காலாவதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டு நகர் நல அலுவலர் பரணிகுமாரின் முன்னாள் தீயில் அழிக்கப்பட்டன.

÷சந்தேகப்படும்படியாக இருப்புப் பொருள்கள் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக தஞ்சாவூர் உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த திடீர் ஆய்வில் உணவு ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:20
 


Page 339 of 519