தினமலர் 24.02.2010
சுகாதாரத்துறையினர் ஆய்வு
மடத்துக்குளம்: மடத்துக்குளம் கணியூர், காரத்தொழுவு, உள்ளிட்ட பகுதி கடைகளில் அளவுகளிலும், தரத்திலும் முறைகேடு குறித்து பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் உள்ள மளிகைகடை, டீக்கடை, பேக்கரி, ஆகிய கடைகளில் வட்டார சுகாதார மேற்பார் வையாளர் முருகதாஸ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சதாசிவம், சந்திரசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கலப்படமற்ற அரசு முத்திரையுள்ள டீ தூள் விற்பனை செய்யுமாறு மளிகைக்கடைகளில் அறிவுறுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான சில கடைகளில் டீத்தூள் எடுத்து உணவு பகுப்பாய்வு மைய சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.