Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரத்துறையினர் ஆய்வு

Print PDF

தினமலர் 24.02.2010

சுகாதாரத்துறையினர் ஆய்வு

மடத்துக்குளம்: மடத்துக்குளம் கணியூர், காரத்தொழுவு, உள்ளிட்ட பகுதி கடைகளில் அளவுகளிலும், தரத்திலும் முறைகேடு குறித்து பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் உள்ள மளிகைகடை, டீக்கடை, பேக்கரி, ஆகிய கடைகளில் வட்டார சுகாதார மேற்பார் வையாளர் முருகதாஸ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சதாசிவம், சந்திரசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கலப்படமற்ற அரசு முத்திரையுள்ள டீ தூள் விற்பனை செய்யுமாறு மளிகைக்கடைகளில் அறிவுறுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான சில கடைகளில் டீத்தூள் எடுத்து உணவு பகுப்பாய்வு மைய சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Last Updated on Wednesday, 24 February 2010 06:48
 

டீக்கடைகளில் சோதனை: கலப்பட டீ தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 23.02.2010

டீக்கடைகளில் சோதனை: கலப்பட டீ தூள் பறிமுதல்

சிங்கம்புணரி,பிப்.22: சிங்கம்புணரி டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் திங்கசக்கிழமை நடத்திய திடீர் சோதனையில் பல கடைகளில் கலப்பட டீதூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபதி உத்தரவின் பேரில் பேரூராட்சி உணவு ஆய்வாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சேரலாதன், பேரூராட்சி பணியாளர்கள், சிங்கம்புணரியில் உள்ள பல டீக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் 8 கடைகளில் 20 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

Last Updated on Tuesday, 23 February 2010 09:55
 

போலி டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 23.02.2010

போலி டீத்தூள் பறிமுதல்

திண்டிவனம் பிப் 22: திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் திங்கள்கிழமை கடைகளில் திடீர் சோதனை செய்து விற்பனை செய்து வரும் போலி டீத்தூள்களை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் சுகாதார ஆய்வாளர்கள் ஜோதிபாசு, சரவணன் உள்ளிட்டோர் நகரில் உள்ள 24 கடைகளில் டீத்தூள் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். இதில் 13 கிலோ போலியான டீத்தூள் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஒலக்கூர் வட்டார மருத்துவர் சாந்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பரமசிவம், மனோகரன் உள்ளிட்டோர் பட்டணம் கிராமத்தில் ஆனந்தனின் வீட்டில் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த 25 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 09:54
 


Page 341 of 519