போலி டீ தூள்; கடைகளில் சோதனை
Tuesday, 23 February 2010 09:50
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 23.02.2010 போலி டீ தூள்; கடைகளில் சோதனை திருவண்ணாமலை, பிப். 22: டீ கடைகளில் போலி டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா? என சுகாதாரத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், திருவணணாமலை, தண்டராம்பட்டு, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 53 கடைகளில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் சித்ரா தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் செய்யாறு, ஆரணி, மேற்கு ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் 73 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மாதிரியில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறினர்.
Last Updated on Tuesday, 23 February 2010 09:52
|
தென்காசியில் ரூ. 15 ஆயிரம் கலப்பட டீ தூள் பறிமுதல்
Tuesday, 23 February 2010 09:48
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 23.02.2010 தென்காசியில் ரூ. 15 ஆயிரம் கலப்பட டீ தூள் பறிமுதல் தென்காசி, பிப். 22: தென்காசியில் திங்கள்கிழமை ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீ தூள் மற்றும் கெட்டுப்போன முந்திரி பருப்புகளை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி பொது சுகாதார துணை இயக்குநர் மீரான்மைதீன் உத்தரவின்படி, தென்காசி நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் தலைமையில் உணவு ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அலுவலர் ராஜ், ஆய்வாளர் ஜப்பார், மேற்பார்வையாளர்கள் தங்கவேலு, காசி உள்ளிட்டோர் தென்காசி பகுதியில் திங்கள்கிழமை கலப்பட டீதூள் மற்றும் கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். தென்காசி ஆபாத் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த திவான் மைதீனுக்கு சொந்தமான கட்டடத்தில் சோதனையிட்டபோது, ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீதூள் மற்றும் கெட்டுப்போன முந்திரி பருப்புகளை கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Last Updated on Tuesday, 23 February 2010 09:49
தேயிலை கடைகளில் திடீர் சோதனை: சுகாதாரத்துறை நடவடிக்கை
Tuesday, 23 February 2010 09:45
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 23.02.2010 தேயிலை கடைகளில் திடீர் சோதனை: சுகாதாரத்துறை நடவடிக்கை திருநெல்வேலி, பிப். 22: திருநெல்வேலியில் திங்கள்கிழமை தேயிலை விற்பனை செய்யும் கடைகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ, இணை இயக்குநர் கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தேயிலை கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை திருநெல்வேலி மாநகர் பகுதியிலும் நடைபெற்றது. இதை மாநகராட்சி உணவு ஆய்வாளர்கள் அ.ரா. சங்கரலிங்கம், பி. காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் அரசகுமார் ஆகியோர் நடத்தினர். சந்திப்பு, நகரம் பகுதிகளில் உள்ள தேயிலை மொத்த விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதி, புட்டாரத்தியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் உள்ள இரு கடைகளில் கலப்பட தேயிலை இருப்பதாக சந்தேகித்த அதிகாரிகள், அவற்றை எடுத்து உணவு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அத் தேயிலை பகுப்பாய்வில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Last Updated on Tuesday, 23 February 2010 09:47
|
|
|
|
Page 342 of 519 |