டீக்கடைகளில் சுகாதாரத்துறை 'ரெய்டு' ஏழு கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
Tuesday, 23 February 2010 07:04
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 23.02.2010 டீக்கடைகளில் சுகாதாரத்துறை 'ரெய்டு' ஏழு கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
உடுமலை : உடுமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளி லுள்ள டீக்கடைகளில் சுகாதாரத்துறையினர்அதிரடி ஆய்வு செய்தனர். ஏழு கிலோ கலப்பட "டீ'த்தூளை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரிசனம்பட்டி, பெரியவாளாடி, அமராவதிநகர் மற்றும் செல்லப்பம்பாளையம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களில் கலப்பட டீத்தூள் விற்பனை மற்றும் பயன்படுத்தப்படுத்தப்படுகிறதா என ஆய்வு நடந்தது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் தலைமையில், ஆய்வாளர்கள் நாகதிருமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவானந்தம் மற்றும் கோடீஸ்வரன் இப்பணியில் ஈடுபட்டனர். நேற்று 17 டீக்கடைகள், 7 மளிகை கடைகள் என மொத்தம் 24 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், கலப்பட டீத்தூள் என கண்டறியப்பட்ட ஏழு கிலோ தூளை பறிமுதல் செய்து அழித்தனர். டீத்தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என கண்டறியடீத்தூள் உணவு மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வு கூடத்திற்கு அனுப்பட்டது.ஆய்வில், டீக்கடைகளில் பொதுமக்கள் முன்னிலையில்,டீத்தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை கண்டறியும் சோதனை முறை செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் கலப்படடீத்தூள் பயன்படுத்துவதால், மூட்டுவலி, குடல்புண் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.
Last Updated on Tuesday, 23 February 2010 07:05
|
சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக் கடைகளில் திடீர் ஆய்வு
Tuesday, 23 February 2010 07:02
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 23.02.2010 சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக் கடைகளில் திடீர் ஆய்வு விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மளிகை கடை, டீக்கடைகளில் நேற்று சுகாதார துறையினர் திடீர் சோதனை நடத்தினர். திண்டிவனம்: நகராட்சி ஆணையர் முருகேசன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் ராஜரத்தினம், ஜோதிபாசு, சரவணன் உள்ளிட்டோர் கடைகளில் விற்கப்படும் டீத்தூள் களை பரிசோதனை செய்தனர். இதில் 20 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒலக்கூர் வட்டார மருத்துவஅலுவலர் சாந்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பரமசிவம், மனோகர், புஷ்பநாதன் ஆகியோர் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப் போது டீக்கடையில் இருந்த கலப் பட டீத்தூள் பறிமுதல் செய்யப் பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் வீட்டில் வைத்திருந்த 22 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். விக்கிரவாண்டி: வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கலியபெருமாள், ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். விக்கிரவாண்டி பகுதியில் உள்ள மளிகைகடைகள், டீக்கடை, பொதுவிநியோக கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு போலி டீத்தூள் பாக்கட்டுகள் 25 கிலோ பறிமுதல் செய்தனர். செஞ்சி: வட்டார சுகாதார மேற் பார்வையாளர் நல்லதம்பி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏழுமலை, விஜயகுமார், சண்முகம், இளங்கோ, தமிழ்வாணன் உள்ளிட் டோர் பஸ் நிலையம், திண்டிவனம் ரோடு, விழுப்புரம் ரோடு பகுதியில் சோதனை நடத்தினர்.இதில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் இருந்த 10 கிலோ கலப்பட டீ தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Last Updated on Tuesday, 23 February 2010 07:03
வாலாஜா, ராணிப்பேட்டையில் சுகாதாரத்துறை அதிரடி சோதனை
Tuesday, 23 February 2010 07:01
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 23.02.2010 வாலாஜா, ராணிப்பேட்டையில் சுகாதாரத்துறை அதிரடி சோதனை
வாலாஜா/ ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை, வாலாஜாவில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை செய்து கலப்பட பொருட்களை பறிமுதல் செய்தனர்.மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில் நேற்று அதிகாரிகள் வாலாஜா, ராணிப்பேட்டையில் உள்ள மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.டீக்கடைகளில் சோதனை செய்த அவர்கள் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டு பரிசோதனை செய்ததில் டீத்தூள் கரைந்து தண்ணீர் பிரவுன் கலரில் நிறம் மாறியது. பல கடைகளில் நிறம் மாறிய டீத்தூள் சில கடைகளில் நிறம் மாறவில்லை. இது குறித்து சுரேஷ் கூறுகையில் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டால் நீர் நிறம் மாறக்கூடாது.
நிறம் மாறினால் அது கலப்பட டீத்தூளாகும். இந்த டீயை குடிப்பவர்களுக்கு குடல் சம்பந்தமான நோய்கள், கை, கால் மூட்டு வலிகள் ஏற்படும் என்றார்.மேலும் மளிகை கடைகளில் சோதனை செய்ததில் சில கடைகளில் கடையின் பெயருடன் பிளாஸ்டிக் கவர்களில் பருப்பு, சர்க்கரை உள்பட பல பொருட்கள் பேக் செய்து விற்பது தெரியவந்தது. பாக்கட்டின் மேல் தயாரிப்பு தேதி,காலாவதி தேதி மற்றும் விலை குறிக்கப்படவில்லை. இது உணவு கலப்பட சட்டத்தின்படி குற்றமாகும். இது போன்ற கடைகளில் சுகாதாரத்துறையினர் மாதிரிகள் எடுத்தனர். எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கிண்டியில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு டெஸ்ட் ரிசல்ட் கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Tuesday, 23 February 2010 07:01
|
|
|
|
Page 343 of 519 |