Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கலப்பட டீ தூள் உபயோகம்?53 டீக்கடைகளில் சோதனை

Print PDF

தினமலர் 23.02.2010

கலப்பட டீ தூள் உபயோகம்?53 டீக்கடைகளில் சோதனை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை பகுதியில் கலப்பட டீ தூள் பயன் படுத்தப்படுகிறதா என்பது குறித்து 53 டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.திருவண்ணாமலை நகரில் துணை சுகாதார இயக்குனர் சித்ரா மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று டீ கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் டீ கடைகளில் பயன்படுத்தப்படும் டீ தூள்கள் தரமானதா, கலப்பட டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருவண் ணாமலையை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இதேபோல் சோதனை மேற் கொள்ளப்பட்டன.மொத்தம் 53 டீக்கடைகளில் டீ தூள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 23 February 2010 06:58
 

நெல்லை தேயிலை விற்பனை கடைகளில்மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமலர் 23.02.2010

நெல்லை தேயிலை விற்பனை கடைகளில்மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

திருநெல்வேலி:நெல்லையில் தேயிலை விற்பனை கடைகள், குடோன்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.தமிழகம் முழுவதும் கலப்படம் செய்யப்பட்ட தேயிலை விற்கப்படுவதாக "தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, உணவு கலப்பட தடைச்சட்ட இணை இயக்குனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தேயிலை விற்பனை நிலையங்கள், மொத்த தேயிலை விற்பனை குடோன்களில் நேற்று ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லையில் மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி கலு.சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் அரசகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நெல்லை ஜங்ஷன், டவுன் பகுதிகளில் தேயிலை விற்பனை கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தேயிலை உதிரிகள், தேயிலை பாக்கெட்டுகளை உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினர். தேயிலையில் கலப்படம் செய்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரான் மைதீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தேயிலை விற்பனை மையங்களில் திடீர் சோதனை நடத்தி, தேயிலைகளை உணவு மாதிரியாக எடுத்து சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பினர்

 

தென்காசியில் ரூ.15 ஆயிரம்கலப்பட தேயிலை பறிமுதல்

Print PDF

தினமலர் 23.02.2010

தென்காசியில் ரூ.15 ஆயிரம்கலப்பட தேயிலை பறிமுதல்

தென்காசி:தென்காசியில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட தேயிலையை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தென்காசியில் கலப்பட தேயிலை, கெட்டுப்போன முந்திரி பருப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து நெல்லை பொது சுகாதார துறை துணை இயக்குநர் மீரான்மைதீன் உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் தலைமையில் உணவு ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அலுவலர் டெல்விஸ்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜப்பார், மேற்பார்வையாளர்கள் தங்கவேலு, காசி உள்ளிட்டோர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கலப்பட தேயிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படும் வீடு ஆபாத் பள்ளிவாசல் அருகே இருப்பது தெரிய வந்தது. இந்த வீட்டிற்குள் சென்ற நகராட்சி அதிகாரிகள் அங்கு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த தேயிலை மற்றும் முந்திரி பருப்புகளை ஆய்வு செய்தனர். தேயிலை கலப்படம் என்றும், முந்திரி பருப்பு கெட்டு போனவை என்றும் தெரிய வந்தது.இவற்றின் மாதிரியை சோதனைக்காக அதிகாரிகள் எடுத்தனர். சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட தேயிலை, கெட்டு போன முந்திரி பருப்பு பார்சல்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை விற்பனைக்கு வைத்திருந்த திவான் மைதீன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கலப்பட தேயிலை, கெட்டு போன முந்திரி பருப்பு கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தென்காசி பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புரோட்டா கடைகளில் சால்னாவிற்கு இந்த கெட்டு போன முந்திரி பருப்பு பயன்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

Last Updated on Tuesday, 23 February 2010 06:53
 


Page 344 of 519