Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Print PDF

தினமலர் 21.022010

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர் : யானைக்கால் நோய் தாக்குதலை தடுக்கும் மாத்திரைகளை வழங்க தன்னார்வ லர்களுக்கு ரெட்கிராஸ் அழைப்பு விடுத்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சுகாரத்துறை யினரால் வரும் 28ம்தேதி அன்று டிஇசி மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரப்பணி துணை இயக்குனர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள், பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்களில் உள்ளோர் என அனைவரும் இப்பணியில் ஈடுபட்டு ஒத்துழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் வேண்டுகோளை ஏற்று ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளை தன்னார்வ தொண்டர்களை இப்பணியில் ஈடுபடுத்த உள்ளது.இதுகுறித்து ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் டாக்டர் வசந்தா கூறுகையில், இப்பணியில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை 43, மருத்துவக்கல்லூரி சாலை, மேம்பாலம் அருகில் உள்ள ரெட்கிராஸ் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.விருப்பம் உள்ளவர்கள் மற்றும் நேரில் வர இயலாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04362 272333 மற்றும் செல் 94427 29450. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி குறித்த பயிற்சியை வரும் 23ம்தேதி அன்று தஞ்சை நகராட்சி அலுவலகத்தில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்பழகன் எம்எல்ஏ திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 20.02.2010

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்பழகன் எம்எல்ஏ திடீர் ஆய்வு

பழனி
, பிப்.19: பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்பழகன் எம்.எல்.. வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

பாலசமுத்திரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 200 முதல் 300 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 200 முதல் 230 பிரசவம் நடைபெறுகிறது.

இங்கு அன்பழகன் எம்.எல்.. வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். மருத்துவர், செவிலியர்கள், நோயாளிகள் ஆகியோரிடம் அவர் குறைகளைக் கேட்டார்.

மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும், கட்டடம் உள்ள இடம் பேரூராட்சி பெயரிலேயே இருப்பதால் இங்கு புதிய கட்டடம் கட்ட வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அன்பழகன் எம்எல்ஏ கூறியதாவது:

பேரூராட்சியிடம் இருந்து சம்பந்தப்பட்ட கட்டடத்தை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தக் கட்டடத்தின் அருகிலேயே சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதிய படுக்கை அறை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படும்.

மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களின் எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்பதால், இதை கூடுதல் வசதியுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையமாக மாற்றவும், இதற்குட்பட்ட கலிக்கநாயக்கன்பட்டி அல்லது கோதைமங்கலத்தில் மற்றொரு சுகாதார மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அன்பழகன் எம்எல்ஏவிடம் கூடுதல் மருத்துவர், பணியாளர்கள் தேவை எனக் கோரிக்கை விடுத்தனர். மருந்துகள் வைக்குமிடம் உள்ளிட்ட பல பகுதிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ மகப்பேறு பிரிவில் குழந்தைகளைப் பார்த்து அவர்களுக்குத் தலா ரூ.100 அன்பளிப்பு வழங்கினார். உடன் திமுக பேரூராட்சிச் செயலர் முத்துசாமி உள்பட பலர் இருந்தனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:32
 

2010}11}ம் நிதியாண்டில் சாலை கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம்

Print PDF
தினமணி 20.02.2010

2010}11}ம் நிதியாண்டில் சாலை கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம்

மதுரை, பிப். 19: மதுரை மாநகராட்சியில் 2010}2011}ம் நிதியாண்டில் சாலை மற்றும் கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரி விதிப்பு நிதிக் குழுக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வரி விதிப்பு நிதிக் குழுத் தலைவர் மகேஸ்வரி போஸ் தலைமை வகித்தார். தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், 2010}2011}ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்தாண்டை விட நடப்பாண்டில் வருவாய் அதிகரிப்பது தொடர்பாகவும், கொசு ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட மக்கள் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படும் வகையில் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வீ.தேவர் என்ற நல்லகாமன், எம்.கணேசன், அழகர்சாமி, கே.பி. கலைமதி, சுஜாதா, எம். ஈஸ்வரி, ஆர்.மங்களஈஸ்வரி, உதவி ஆணையர்கள் ரா.பாஸ்கரன் (வருவாய்), தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கயற்கண்ணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:11
 


Page 346 of 519