Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை: வீடுகளில் நீர்தேக்கத்தை தவிர்க்காதோருக்கு அபராதம்; கடலூர் கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

மாலைமலர் 19.02.2010

கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை: வீடுகளில் நீர்தேக்கத்தை தவிர்க்காதோருக்கு அபராதம்; கடலூர் கலெக்டர் எச்சரிக்கை

கொசுத்தொல்லை ஒழிப்புக்குழு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் இக்குழுவின் உறுப்பினர்கள் செயல்பாட்டினை விளக்கி கூறினார். குழு உறுப்பினர்கள் பேசும்போது நகரியத்தின் விரிவாக்க குடியிருப்புகள் பஞ்சாயத்து எல்லைக்குட்படுவதால் கொசு ஒழிப்பு பணிகளை நகராட்சி செய்வதில் நிர்வாக பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

பஞ்சாயத்து தலைவர்களின் ஈடுபாட்டினை இப்பணிகளில் ஏற்படுத்த வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனப் பொருள்கள் காலகாலமாக பயன்படுத்துவதால் கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பது தெரிய வருவதால் கொசுக்கள் பெருகும் தற்காலிக இடங்களை அறவே இல்லாமல் செய்வதில் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

நிரந்தரமான நீர் தேக்கங்களை ஒவ்வொரு வீட்டிலும் தவிர்ப்பதற்கு பொது சுகாதார சட்ட பிரிவுகளை பயன்படுத்தி சட்டரீதியாக நகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குனர், மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்னடர்.

 

புதிய பஸ் நிலையத்தில் சுகாதாரக் கேடு: உணவகம் மூடல்

Print PDF

தினமணி 19.02.2010

புதிய பஸ் நிலையத்தில் சுகாதாரக் கேடு: உணவகம் மூடல்

திருநெல்வேலி,பிப்.18: திருநெல்வேலி,புதிய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட ஹோட்டலை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மூடினர்.

வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் ஹோட்டல்கள்,டீ கடைகள் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் பகுதி அருகே கழிப்பறை அருகே உள்ள ஒரு ஹோட்டல்,பெரும் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் கா.பாஸ்கரனுக்கு புகார் சென்றுள்ளது.

அவரது உத்தரவின்பேரில்,மாநகராட்சி உதவி ஆணையர் எல்.கே.பாஸ்கர்,உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அந்த ஹோட்டலை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த ஹோட்டலில் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் உணவு தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. உடனே அந்த ஹோட்டலின் உரிமையாளர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த தங்கமுத்துக்குமாரை,அவர்கள் எச்சரித்தனர்.பின்னர்,அந்த ஹோட்டலை மூட அவர்கள் உத்தரவிட்டனர்.இதையடுத்து அந்த ஹோட்டல் மூடப்பட்டது.

இச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Friday, 19 February 2010 11:45
 

சுகாதார விதிகளை கடைபிடிக்காத 15 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி 19.02.2010

சுகாதார விதிகளை கடைபிடிக்காத 15 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்

திருப்பூர், பிப்.18: பொது சுகாதார விதிகளைக் கடைபிடிக்காத 15 ஹோட்டல்களுக்கு திருப்பூர் மாநகராட்சி சுகாதாரக் பிரிவு சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 600க்கு மேற்பட்ட ஹோட்டல்கள் இயங்கி வருகின் றன. பெரும்பாலான ஹோட்டல்களில் சுகாதார விதிகளை முறையாக கடைபி டிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, மாநகர் நல அதிகாரி கே.ஆர்.ஜவஹர்லால் தலைமையில் 6 சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர், வியாழக்கிழமை அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

20க்கு மேற்பட்ட ஹோட்டல்களில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில் சமை யலறை, சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், கழிப்பிடம், பணியாளர்களின் உடல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 15 ஹோட்டல்கள் பொது சுகாதார விதிகளுக்கு புறம்பாக சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு பொது சுகாதார விதிகள் குறித்து தெளிவுபடுத்திம அதிகாரிகள், 7 தினங்களுக்குள் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள தோட்டீஸ் அளித்து உத்தரவிட்டனர். தவிர, அந்த ஹோட்டல் பணியாளர்களுக்கு, வயிற்றுப் புழுக்களை அழிக்கக்கூடிய மாத்திரைகளும் விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகர் நல அதிகாரி ஜவஹர்லால் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் இனி ஆய்வுப் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் இருமுறை சுகாதார ஆய்வாளர்கள் ஹோட்டல்களில் திடீர் சோதனையிட்டு குறைகள் குறித்த இந்த பதிவேட்டில் குறிப்பிடுவர். சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஹோட்டல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Last Updated on Friday, 19 February 2010 11:19
 


Page 347 of 519