Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மருத்துவ மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற ஆய்வு! மாநகராட்சி நகர்நல துறை தீவிர முயற்சி

Print PDF

தினமலர் 18.02.2010

மருத்துவ மையங்களுக்கு ஐ.எஸ்.., சான்று பெற ஆய்வு! மாநகராட்சி நகர்நல துறை தீவிர முயற்சி

கோவை : கோவை மாநகராட்சியிலுள்ள 20 மருத்துவ மையங்கள் மற்றும் மகப்பேறு மையங்களுக்கு ".எஸ்.., தரச்சான்று' பெறுவதற்கான ஆரம்ப நிலை ஆய்வு நடக்கிறது.
மாநகராட்சியின் 72 வார்டுகளில் 20 மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், ஆறு மையங்களில் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. மீதமுள்ள 14 மருத்துவ மையங்களில் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மருத்துவ மையமும், மருத்துவ அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.

மருத்துவ அலுவலர் தவிர, நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் எட்டு பேர், சுகாதார பார்வையாளர் ஒருவர், ஆயா மற்றும் துப்புரவு பணியாளர் என மொத்தம் 12 பேர் பணியில் உள்ளனர். தினமும் காலை 8.30 முதல் 12.30 மணி வரை, மாலை 3.00 முதல் 5.00 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாரம் தோறும் புதனன்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

இருபது மையங்களிலும் புற்றுநோய் ஒழிப்பு பிரிவு செயல்படுகிறது. இங்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. குடும்ப கட்டுப்பாடு மருத்துவ முறைகள் மற்றும் தடுப்பு சாதனம் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தும் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை தோறும், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தவிர, பொதுமருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தரமான மருத்துவசேவை அளித்து வரும் மாநகராட்சி மருத்துவ மையங்களுக்கு ஐ.எஸ்..,தரச்சான்று பெறுவதற்கான ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, .எஸ்.., சான்று பெறும் வழிமுறைகளுக்கான ஆலோசகர் சிவக்குமார் கூறியதாவது: கோவை மாநகராட்சியிலுள்ள 20 மருத்துவ மையங்களையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவ மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அலுவலர் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை, நோயாளிகளை பராமரிக்கும் முறை, மருந்து பொருட்கள் வழங்கும் விதம் மற்றும் ஆவண பராமரிப்பு தொடர்பாக ஆய்வு நடக்கிறது.
மாநகராட்சி மருத்துவ மையங்கள், தனியார் மருத்துவமனைகளுடன் போட்டி போடும் வகையில் சிகிச்சையின் தரம் உயர்ந்துள்ளது. அதேவேளையில் சில குறைபாடுகள் ஆய்வில் தெரியவந்து சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. தற்போது, .எஸ்.., சான்று பெறுவதற்கான முதல்நிலை ஆய்வு மேற் கொண்டுள்ளோம். மருத்துவசேவை மற்றும் பராமரிப்பு பணிகளில் திருப்தி ஏற்பட்ட பின், .எஸ்.., சான்று பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அப்போது, முழுமையான தரத்துடன் மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும். இவ்வாறு, சிவக்குமார் தெரிவித்தார்.

மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் சுமதி கூறியதாவது: கடும் பணிகளுக்கிடையே மேற்கொண்ட முயற்சியினால் 20 மருத்துவ மையங்களும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்ந்துள்ளது. மருத்துவக் கருவிகள், ஸ்கேனர், டாப்ளர் இயந்திரங்கள் என்று, அறுவைச்சிகிச்சை மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. தவிர, மருத்துவ மையங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக மக்களுக்கு, மாநகராட்சி மருத்துவ தரத்தை தெரியப்படுத்தும் விதமாக ஐ.எஸ்.., சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இவ்வாறு, சுமதி தெரிவித்தார்.

Last Updated on Thursday, 18 February 2010 06:49
 

கரூரில் போலி ஆயில் தொழில்சாலைக்கு சீல்

Print PDF

தினமணி 17.02.2010

கரூரில் போலி ஆயில் தொழில்சாலைக்கு சீல்

கரூர், பிப். 16: கரூரில் செயல்பட்டு வந்த போலி ஆயில் தொழில்சாலைக்கு மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை சீல் வைக்க உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டத்தில் சில பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என்ஜின் ஆயில் போலியானதாக இருக்கக்கூடும் என்று பொதுமக்கள் சார்பில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

மேலும், கரூர் சுக்காலியூர் காட்டுப் பகுதியில் போலி என்ஜின் ஆயில் தயாரிக்கும் தொழில்சாலைகள் இயங்கி வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து கடந்த ஜன. 4-ம் தேதி கரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி. வெள்ளியங்கிரி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார் ஆகியோர் சுக்காலியூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த ஆயிலை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆயில் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. சோதனையில், அந்த ஆயில் போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆயில் தயாரிக்கும் தொழில்சாலைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி. வெள்ளியங்கிரி, வட்ட வழங்கல் அலுவலர் கே. சக்திவேல், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் சுக்காலியூர் காட்டுப் பகுதியில் முறையான அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த தனியார் தொழில்சாலைக்கு சீல் வைத்தனர்.

ஆலையின் உள்ளே கழிவுஆயில் 35 பேரல், ஆயில் என்ஜின் 25, வடிகட்டும் இயந்திரம் 2, கல்மாவு 23 மூட்டை, காலி பேரல் 85 உள்ளன என்றார் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி. வெள்ளியங்கிரி.

மேலும், இது தொடர்பாக ஆலையின் உரிமையாளர் கரூர் சின்னஆண்டாங்கோயிலைச் சேர்ந்த ரமேஷ் (31), மேலாளர் கதிரேசன் ஆகியோரை தேடி வருகிறோம் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 17 February 2010 08:58
 

போலி 'ஆயில்' நிறுவனத்துக்கு 'சீல்' : கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

Print PDF

தினமலர் 17.02.2010

போலி 'ஆயில்' நிறுவனத்துக்கு 'சீல்' : கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

கரூர்: கரூர் அருகே வாகனங்களுக்கான போலி "ஆயில்' தயாரித்த நிறுவனத்துக்கு "சீல்' வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில் வாகனங்களுக்கான போலி "ஆயில்' தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்குவதாக கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு வந்த தகவல் அடிப்படையில் கடந்த ஜன., நான்காம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரி தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். சுக்காலியூரில் இருந்த நான்கு தொழிற்சாலையில் திறந்திருந்த இரண்டு தொழிற்சாலையில் மட்டும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலாளர் கதிரேசன் மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தொழிற்சாலையில் ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஆறு "டிரம்'களில் இருந்த ஆறாயிரம் லிட்டர் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பெயர் ஒட்டப்பட்டிருந்த கேன்களில் நிரப்பியிருந்த நாலாயிரம் லிட்டர் "ஆயில்' பறிமுதல் செய்யப்பட்டு "சாம்பிள்' பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வக முடிவில் அவை போலியானவை என்று சான்றளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சம்மந்தப்பட்ட "அங்கு ஜெயா டிரேடர்ஸ்' நிறுவனத்துக்கு "சீல்'வைக்க கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரி, இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், ஆர்.., கண்ணன் முன்னிலையில் "அங்கு ஜெயா டிரேடர்ஸ்' நிறுவனத்துக்கு "சீல்' வைக்கப்பட்டது. உரிமையாளர் கரூர் சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த ரமேஷ்(31) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கழிவு எண்ணெய் 35 பேரல், இஞ்சின் ஆயில் 25 பேரல், வடிகட்டும் கருவி இரண்டு, கல்மாவு 25 மூட்டை, காலி பேரல் 85 பறிமுதல் செய்யப்பட்டன.

Last Updated on Wednesday, 17 February 2010 05:25
 


Page 351 of 519