Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமணி 12.02.2010

கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி ஆலோசனை

திருநெல்வேலி, பிப். 11: திருநெல்வேலி மாநகர் பகுதியில் கொசுகளை ஒழிப்பது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சந்திப்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாநகர சுகாதார அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமை வகித்தார்.

உதவி ஆணையர் (பொறுப்பு) சாமுவேல் செல்வராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பூச்சியல் துறை வல்லுநர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கிருமி நாசினிகளைத் தெளிப்பது, கொசுக்களை நவீன முறையில் அழிப்பது, கொசு மருந்து அடிக்க நவீன கருவிகளை இயக்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

பின்னர், நவீன கருவிகளை இயக்குவது குறித்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கொசுக்களை அழிக்க 65 குழுக்கள் அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 10:41
 

கலப்பட டீ விற்ற கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

Print PDF

தினமணி 12.02.2010

கலப்பட டீ விற்ற கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி, பிப். 11: திருநெல்வேலி சந்திப்பில் கலப்பட டீ விற்ற கடை உரிமையாளர், ஊழியர் ஆகியோர் மீது மாநகராட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இம் மாநகராட்சி உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் அரசகுமார், சாகுல்ஹமீது ஆகியோர் கடந்த 25 -9 -2009 அன்று சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்தக் கடையில் கலப்பட டீ விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அதை பகுப்பாய்வு செய்ததில், அதில் செயற்கை வண்ணம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக அந்தக் கடை உரிமையாளர் தர்மராஜ், ஊழியர் பகவதி ஆகியோர் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய அனுமதிக் கேட்டு, அதன் இணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அவர் அனுமதி அளித்ததின் பேரில், அவர்கள் இருவர் மீதும் மாநகராட்சி சார்பில் திருநெல்வேலி நான்காவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

Last Updated on Friday, 12 February 2010 10:40
 

நாமக்கல் நகராட்சியில் இன்று கொசு ஒழிப்பு பணி

Print PDF

தினமணி 12.02.2010

நாமக்கல் நகராட்சியில் இன்று கொசு ஒழிப்பு பணி

நாமக்கல், பிப். 11: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ÷நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் வீடு, வீடாகச் சென்று கொசுப் புழு ஒழிக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 200-க்கு மேற்பட்ட பணியாளர்கள் வீடுதோறும் சென்று பேட்டக்ஸ், கியூலக், ஆர்மிஜெரஸ் உள்ளிட்ட கொசுப் புழு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க உள்ளனர்.

÷வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர், சாக்கடைத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, கழிப்பறைகளிலும் மருந்து தெளிக்கப்படுóகிறது. பொதுமக்களும் கொசுக்களை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். செப்டிக் டேங் குழாய்களுக்கு வலை கட்டுவது அவசியம். மருந்து தெளிக்க வரும் நகராட்சிப் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Last Updated on Friday, 12 February 2010 10:34
 


Page 353 of 519