Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பறை திறப்பு

Print PDF

தினமணி 11.02.2010

ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பறை திறப்பு


திருச்சி, பிப். 10: திருச்சி மாநகரம், வாமடம் பகுதியில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பறையை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு புதன்கிழமை திறந்துவைத்தார்.

மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தில் இந்தக் கழிப்பறை கட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. தட்சிணாமூர்த்தி, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், கோட்டத் தலைவர் ரெ. அறிவுடைநம்பி, உதவி ஆணையர் வி. நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள் மு. அப்துல்லா, சி. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 11 February 2010 11:20
 

ராமேசுவரம் மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்க யாத்திரை பணியாளர் சங்கம் முடிவு

Print PDF

தினமணி 11.02.2010

ராமேசுவரம் மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்க யாத்திரை பணியாளர் சங்கம் முடிவு

ராமேசுவரம், பிப்.10: ராமேசுவரத்தை தூய்மைப் பகுதியாக மாற்ற கோயிலை சுற்றியுள்ள மக்களுக்கு குப்பைக் கூடைகள் வழங்கிட யாத்திரை பணியாளர் சங்கம் முடிவுசெய்துள்ளது.

ராமேசுவரம் அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கச் செயலர் ரவி, துணை தலைவர் முனியசாமி, துணைச் செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராமேசுவரம் தீவை பாலிதீன் தடை செய்த பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து அதிகாரிகளின் நடவடிக்கையால், தீவு பகுதி தூய்மை பகுதியாக காட்சியளிக்கிறது. இதைப் பேணிகாக்கவும் கோயிலைச் சுற்றி சுற்றுசூழலைப் பாதுகாத்திடவும் நான்கு ரதவீதயில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு குப்பை கூடைகள் வழங்குவது;

ராமேசுவரம் நகரின் முக்கிய இடங்களில் பாலிதீன் ஓழிப்பு குறித்த அறிவிப்பு பலகையை அனைத்து மொழியிலும் வைத்து விளம்பரம் செய்வது; ராமேசுவரம் வரும் பக்தர்களுக்காக பேருந்து நிலையத்தில் நிழற்குடை, குடிநீர்த் தொட்டி மற்றும் பேருந்து, ரயில் போக்குவரத்து கால அட்டவணை பலகை அமைத்திடவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு நகராட்சி அலுவலகம் அனுமதி வழங்கிட மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Last Updated on Thursday, 11 February 2010 11:06
 

கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம்

Print PDF

தினமலர் 11.02.2010

கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம்

கடையநல்லூர் : கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காய்ச்சல் பரவி வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டி அமைந்துள்ள பாப்பான் கால்வாய் பகுதியில் கடுமையான சுகாதார கேடு நிலவி வருவதாக கூறப்பட்டதை அடுத்து பாப்பான் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியினை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏவிஎம் சர்வீஸ் பாயிண்ட் தனியார் நிறுவனம் மூலம் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு 30 பணியாளர்களை வைத்து கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இப்பகுதியில் அமைந்திருந்த முள் மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கான பணியினை நகராட்சி தலைவர் இப்ராகிம், கமிஷனர் அப்துல் லத்தீப், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையா பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.

பொதுமக்கள் பாப்பான் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாய் பகுதிகளில் குப்பைகள் மற்றும் மலங்களை விடாமல் இருக்கவும், குப்பைகளை கொட்டாமல் இருக்கவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Thursday, 11 February 2010 08:43
 


Page 355 of 519