நகராட்சியில் சொட்டு மருந்து முகாம்
Tuesday, 09 February 2010 10:18
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 09.02.2010 நகராட்சியில் சொட்டு மருந்து முகாம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் துவக்கியது. முன்னாள் நகர்ராட்சி தலைவர் சீனி இளங்கோ, சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், மனோரா ரோட்டரி சங்க தலைவர் சின்னகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோரா ரோட்டரி சங்க நிர்வாகிகள் செயலாளர் பூவலிங்கம், ரவி, முகமது அலிஜின்னா, அண்ணாத்துரை, கண்ணதாசன், சம்பத், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேலாளர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
Last Updated on Tuesday, 09 February 2010 10:19
|
போலியோ சொட்டு மருந்து முகாம்
Tuesday, 09 February 2010 10:12
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 09.02.2010 போலியோ சொட்டு மருந்து முகாம் செய்யாறு: செய்யாறு நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நகராட்சி: செய்யாறு நகராட்சியில் நடந்த முகாமை சேர்மன் சம்பத் தொடங்கி வைத்தார். மருத்துவ அதிகாரி பிரதாப், துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் மதனராஜன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். 3 மொபைல் "பூத்' உள்ளிட்ட 17 மையங்களில் ஆயிரத்து 509 பெண் குழந்தைகள் உள் ளிட்ட 3 ஆயிரத்து 290 குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை: செய்யாறு அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அதிகாரி சவுந்திரராஜன் இம்முகாமை தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர்கள் சுகன்யா மற்றும் ராஜா ஆகியோர் குழந்தைகளை பரிசோதித்து 428 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். நாட்டேரி: நாட்டேரி ஆர ம்ப சுகாதார நிலையத்தில் பஞ்., தலைவர் பழனி இம்முகாமை தொடங்கினார். மருத் துவ அதிகாரி ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரசன்னா, சுகாதார ஆய்வாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரத்து 938 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட்டது.
Last Updated on Tuesday, 09 February 2010 10:13
தீவிர கொசு ஒழிப்பு திட்டம்: விருதுநகரில் துவக்கம்
Tuesday, 09 February 2010 10:09
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 09.02.2010 தீவிர கொசு ஒழிப்பு திட்டம்: விருதுநகரில் துவக்கம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு திட்டத்தில் விருதுநகர் ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. தமிழகத்தில் தீவிர கொசு ஒழிப்பு திட்டத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டு கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் ஒன்றியம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. கணக்கெடுப்பு: விருதுநகர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்துள் ளது. நல்ல நீர் நிலைகளில் அனாபிலஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். அசுத்தமான நீரில் க்யூலக்ஸ் வகை கொசு உற்பத்தியாகும். டெங்கு, சிக்-குன் குனியா நோய் பரப்பும் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வளரும் மரங்கள், சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், தேவையற்ற பொருள்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தொல்லை தரும் கொசுக்கள் உற்பத்தியாகும். கழிவு நீர் தொட்டிகளிலும் உருவாகும். தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக கொசுப்புழுவின் அடர்த்தி, முதிர் கொசுவின் அடர்த்தி, கொசுக்களின் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. பயிற்சி: கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடவுள்ள கிராம சுகாதார மற்றும் துப்புரவு குழுக்களுக்கும், மாணவர்களுக்கும் கொசு ஒழிப்பு குறித்தும், அது உருவாகும் இடங்களை அழித்தல், அப்புறப்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. கொசு உற்பத்தியாகும் இடத்தில் அபேட் மருந்து தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி மூன்று மாத காலத்திற்கு நடக்கவுள்ளது. துவக்க விழா: தீவிர கொசு ஒழிப்பு திட்டம் ரோசல்பட்டி ஊராட்சித்தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். ஒன்றிய சேர்மன் சீனிவாசகன்,துணை இயக்குனர் வடிவேலன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன் மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Last Updated on Tuesday, 09 February 2010 10:10
|
|
|
|
Page 358 of 519 |