3.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
Monday, 08 February 2010 10:19
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 08.02.2010 3.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வேலூர்,பிப்.7: வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 3,61,532 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இவ்வாண்டுக்கான 2}ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கள், வேலூர் மாவட்டத்தில் 2,248 மையங்களில் நடைபெற்றன. வேலூர் அருகேயுள்ள தொரப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஆட்சியர் செ.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். சுகாதாரம், கல்வி, சமூக நலம், வருவாய்த்துறை, தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 8,854 பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மேற்பார்வை பணியில் 402 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 3,61,418 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. குடியாத்தம் குடியாத்தம் நகரில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் 31 மையங்களில் நடைபெற்றன. மேல்ஆலத்தூர் சாலையில் அமைக்கப்பட்டிந்த முகாமில் நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர், ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் சி. ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் பிரணாகரன், இன்னர்வீல் சங்கச் செயலர் பிரியா குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆம்பூர் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 13,821 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆம்பூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நகரமன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத், குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் தா. உதயராணி, துப்புரவு அலுவலர் (பொறுப்பு) நாராயணமூர்த்தி, துப்புரவு ஆய்வர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Monday, 08 February 2010 10:22
|
மளிகை, புத்தகக் கடைகளில் திடீர் ஆய்வு: 93 பேர் மீது நடவடிக்கை
Monday, 08 February 2010 10:18
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 08.02.2010 மளிகை, புத்தகக் கடைகளில் திடீர் ஆய்வு: 93 பேர் மீது நடவடிக்கை நாகர்கோவில், பிப். 7: பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள் மற்றும் புத்தகக் கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 93 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டத் தொழிலாளர் ஆய்வாளர் பொ. எலியாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சென்னை சட்டமுறை எடையளவுகள் கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆய்வாளர் தா. மோகன், தக்கலை துணை ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் ஏகாம்பரம், முருகா, கனகசபாபதி, ராஜ்குமார், ராமசாமி, குமரேசன் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது எடையளவு குறைவாக இருப்பதாக 22 ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மளிகை, புத்தகக் கடை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் என 461 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 93 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் முழு முகவரி, பொருள்களின் பெயர், நிகர எடை, அளவு, விற்பனை விலை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடாத பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
Last Updated on Monday, 08 February 2010 10:19
1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
Monday, 08 February 2010 10:16
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 08.02.2010 1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து நாகர்கோவில், பிப். 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இம்முகாம் 2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயபால் எம்.எல்.ஏ, போலியோ தடுப்பு சொட்டு மருந்து தென் மண்டல கண்காணிப்பாளர் லியாகத்அலி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், தமிழ் இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகளுக்கு வசதியாக கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை, காந்தி மண்டபம் உள்ளிட்ட 1160 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணியில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் 4 ஆயிரத்து 640 பேர் ஈடுபட்டனர்.
|
|
|
|
Page 361 of 519 |