Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி 08.02.2010

1.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

நாகர்கோவில், பிப். 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இம்முகாம் 2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயபால் எம்.எல்., போலியோ தடுப்பு சொட்டு மருந்து தென் மண்டல கண்காணிப்பாளர் லியாகத்அலி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், தமிழ் இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இம்முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகளுக்கு வசதியாக கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை, காந்தி மண்டபம் உள்ளிட்ட 1160 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணியில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் 4 ஆயிரத்து 640 பேர் ஈடுபட்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:17
 

ஆறுமுகனேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி 08.02.2010

ஆறுமுகனேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஆறுமுகனேரி
, பிப். 7: ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட 20 முகாம்களில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு னாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திசைகாவல் தெருவில் உள்ள ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம் முகாமை ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவர் சா. பொன்ராஜ் தொடக்கிவைத்தார்.

பேரூராட்சி உறுப்பினர்கள் மகாராஜன், ரா. செல்வி, சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஜெயபரணி, அம்முக்குட்டி, பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் ஏ. முத்துக்குமார், லின்ஸ், தங்கராணி, பொம்மையா, சுகாதார செவிலியர் புஷ்பலீலாபாய் கலந்துகொண்டனர். செல்வராஜபுரம் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை திமுக நகரச் செயலர் கா.மு. சுரேஷ் தொடக்கிவைத்தார்.

Last Updated on Monday, 08 February 2010 10:15
 

கரூர் : 90,854 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

Print PDF

தினமணி 08.02.2010

கரூர் : 90,854 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

கரூர், பிப். 7: கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 90,854 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

கரூர் பேருந்து நிலையத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்தைப் புகட்டி, மாவட்ட ஆட்சியர் ஜெ. உமா மகேஸ்வரி முகாமைத் தொடக்கிவைத்தார். அப்போது ஆட்சியர் கூறியது:

2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் 3,212 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக கிராமப்புறங்களில் 768 மையங்களும், நகர்ப்புறத்தில் 38 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நடமாடும் மையமும் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியூரிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுவதற்காக கரூர் பேருந்து நிலையம், குளித்தலை பேருந்து நிலையம், கரூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில், தொடர்ந்து 3 நாள்களுக்கு முழுநேரமும் இயங்கும் வகையில் 4 சொட்டு மருந்து புகட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜன. 10-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட முகாமில் கரூர் மாவட்டத்தில் 89,937 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இதுவரை புதிய குழந்தைகள் 917 பேருக்கும் சேர்த்து 90,854 பேருக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள் தொடர்ந்து 3 நாள்கள் செயல்பட்டு விடுபட்டவர்களையும் கண்டறியும் பணியில் ஈடுபடுவர் என்றார் உமா மகேஸ்வரி.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் க. சதாசிவம், கரூர் நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (புள்ளியியல்) ஈஸ்வரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி. காளியப்பன், எஸ். முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:10
 


Page 362 of 519