Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தேங்காய் எண்ணெயில் கலப்படம்: ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி 04.02.2010

தேங்காய் எண்ணெயில் கலப்படம்: ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், பிப்.3: தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து காங்கயம், தாராபுரம் பகுதிகளில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளில் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் காங்கயம், தாராபுரம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தேங்காய் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, பொதுசுகாதாரத் துறையின் உணவு கலப்பட தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை இந்த ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 100 ஆலைகளில் நடந்த இந்த ஆய்வில் சுமார் 20 ஆலைகளில் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆலைகளில் உள்ள எண்ணெய்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.

ஆய்வகப்பரிசோதனையில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது ஊர்ஜிதமானால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் உணவுகலப்பட தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் கண்ணன். இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் விஜயலட்சுமி (திருப்பூர்) சேகர் (நாமக்கல்), அமுதா (ஊட்டி), சதாசிவம் (கரூர்), செந்தில்குமார் (தாராபுரம்) உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 04 February 2010 10:47
 

கொசு ஒழிப்பு முகாம்

Print PDF

தினகரன் 04.02.2010

கொசு ஒழிப்பு முகாம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் களை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைக்கான முகாம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. வட்டார மரு த்துவ அலுவலர் செல்வமணி தலைமை வகித்தார். ஊரா ட்சி தலைவர்கள் ஆண்டிமடம் சாந்திசெல்வகுமார், விளந்தை சுசீலா மதியழகன் முன்னி லை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் சீமான், அன்பழகன் கொசு ஒழிப்பு பற்றி விளக்கமளித்தனர். தன்னார்வ தொண்டர்கள், சுகாதார ப ணியாளர்கள் கலந்து கொ ண்டு கொசு இல்லாத கிரா மமாக உருவாக்குவோம் என உறுதி மொழி ஏற்றனர். அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்தும், புகை மருந் தும் தெளிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 04 February 2010 07:44
 

தி.நகர் சாலையோர உணவகங்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை அகற்றம்

Print PDF

தினமலர் 04.02.2010

தி.நகர் சாலையோர உணவகங்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை அகற்றம்

தி.நகர் : தி.நகரில் சாலையோர பகுதிகள், பிளாட்பாரங் களை ஆக்கிரமித்து வைக்கப் பட்டிருந்த 10க்கும் மேற் பட்ட தள்ளுவண்டி உணவகங்களை, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று மாலை அகற்றினர்.

தி.நகர் சென்னையின் முக்கிய வணிக பகுதியாக விளங்கி வருகிறது. இதனால், சாலையோரங் களும், பிளாட்பாரங்களும் வணிக ரீதியாக மற்ற இடங்களை விட அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதே போல் இங்கு ஏராளமான சுகாதாரமற்ற முறையிலான உணவகங்கள் இங்கு அதிகம் செயல்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்புகள் குறித்தும் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங் கள் குறித்தும் பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. இந்நிலையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த உணவகங்களை மாநகராட்சி அதிரடியாக மூடியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று தி.நகர் சாலையோர உணவகங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், நேற்று மாலை அதிரடியாக ஈடுபட்டனர். இதில், நடேசன் பூங்கா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, சாலையோர உணவகங்கள் அகற்றப்பட்டன.

Last Updated on Thursday, 04 February 2010 06:35
 


Page 370 of 519