Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சி குப்பை அள்ளும் பணி ஒப்படைப்பு! மகளிர் சுய உதவிக்குழுக்களிடம்...

Print PDF

தினமலர் 04.02.2010

நகராட்சி குப்பை அள்ளும் பணி ஒப்படைப்பு! மகளிர் சுய உதவிக்குழுக்களிடம்...

நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள் சேகரிக்கும் பணி மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தனியார் நிறுவனம் ஒன்று சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. அதை நகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினரின் குப்பை சேகரிக்கும் பணிக்கான காலம் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது குப்பை சேகரிக்கும் பணியை மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் நகராட்சி நிர்வாகத்தினர் ஒப்படைத்துள்ளனர். மொத்தம் உள்ள 30 வார்டுகளை நான்கு மண்டலங்களாக பிரித்து இம்மாதம் 1ம் தேதி முதல் மகளிர் சுய உதவிக்குழுவினர் குப்பை சேகரித்து வருகின்றனர். அந்த பணியில் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 72 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையிலும் அமைந்துள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் தெரிவித்ததாவது:

நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகள் கொசவம்பட்டியில் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து உரம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கான இயந்திரம் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மக்கா குப்பைகள் தனியாக எடுத்து லத்துவாடியில் அமைக்கப்பட்டு வரும் கிடங்கில் கொட்டப்படும். அதன்மூலம் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு ஏற்படாதவாறு இருக்க அந்த கிடங்கைச் சுற்றிலும் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், நகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானம் கடந்த மாத கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இம்மாதம் 1ம் தேதி முதல் சுய உதவிக் குழுவினர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தனியார் நிறுவனத்தினர் கூடுதல் தொகை கேட்டதால், அவர்களுக்கு குப்பை சேகரிக்கும் பணியை விட இயலவில்லை. தற்போது சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 72 பேர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பணி வேறு எந்த நகராட்சியிலும் மேற்கொள்ளப்படவில்லை. நாமக்கல் நகராட்சியில் தான் முதலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான நகராட்சி என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி தூய்மையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் குழு இம்மாதம் 11ம் தேதி நாமக்கல் வர உள்ளது. அக்குழுவினர் அளிக்கும் ஆலோசனை, பரிசீலனை செய்து நடைமுறைபடுத்தப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 04 February 2010 07:48
 

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர் 04.02.2010

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சமயபுரம்: கொள்ளிடம் டோல்கேட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.டோல்கேட் ஒய்.டபிள்யு.சி.ஏ பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சென்னை தலைமை பூச்சியியல் வல்லுநர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். திருச்சி முதுநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, மாவட்ட மலேரியா அலுவலர் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பிரபா, ஒய்.டபிள்யு.சி.ஏ மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி வாலண்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி டோல்கேட் பகுதியின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு சென்றனர். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், சாமுவேல் மனோகரன், கிராம சுகாதார செவிலியர் சுஜாதா ஆகியோர் செய் திருந் தனர்.

Last Updated on Thursday, 04 February 2010 06:10
 

விழுப்புரத்தில் 8ம்தேதி துவக்கம் கழிவுநீர்தொட்டிகுழாயில் கொசுவலைபொருத்தும்பணி நகர்மன்ற தலைவர் அறிவிப்பு

Print PDF
தினகரன் 03.02.2010

விழுப்புரத்தில் 8ம்தேதி துவக்கம் கழிவுநீர்தொட்டிகுழாயில் கொசுவலைபொருத்தும்பணி நகர்மன்ற தலைவர் அறிவிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் கொசுக்களை கட்டுப்படுத்த வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி குழாயில் இலவச கொசு வலை பொருத்தும் பணி வருகிற 8ம்தேதி தொடங்கும் என்று நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் கூறினார்.
விழுப்புரம் நகரில் கொசு உற்பத்தி அதிகரித்து வரு கிறது. கொசு தொல்லை யால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. கொசுக் களை ஒழிக்க நகர் மன்றத்தலைவர் ஜனகராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து காற்று வெளியேற குழாய் வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியில் உற்பத்தியாகும் கொசுக்கள் குழாய் மூலம் வெளியே வருவது தெரிய வந்தது. இதற்கு அடுத்தபடியாக குப்பை, வாய்க்காலில் உற்பத்தியாகிறது.

இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக கழிவுநீர் தொட்டி காற்றுக்குழாயில் கொசு வலையை பொருத்துவது என்று கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் ஜனகராஜ் முடிவு செய்தார். அதன்படி 20 ஆயிரம் வீடுகளில் உள்ள
குழாயில் பொருத்தப்படும் கொசு வலையை ஜனகராஜ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

விழுப்புரம் நகரில் கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து வீடுகளிலும் உள்ள கழிவுநீர் தொட்டி
குழாயில் இலவச கொசுவலை பொருத்தும் பணி 8ம்தேதி தொடங்குகிறது. 20 ஆயிரம் கொசு வலை தேவைப்படுகிறது. முதற்கட்டமாக 10 ஆயிரம் கொசு வலை வாங்க முடிவாகியுள்ளது. கொசு வலை பொருத்தும் பணியை கவுன்சிலர், சமூகஆர்வலர்கள் உதவியோடு நகராட்சி ஊழியர்கள் மேற்கொள்வார்கள். விழுப்புரம் நகரம் 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் 4 இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கப்படும். நகரில் நாய்களை பிடிக்கும் பணி நாளை (4ம்தேதி) துவங்குகிறது. நாய்களை கொல்ல மாட்டோம். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடப்படும்.

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். இதுப்றி தண்டாரோ மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஆணையர் சிவக்குமார், மேலாளர்
லட்சுமிநாராயணன், பொதுப் பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கவுன்சிலர்கள் ரகுபதி, ஸ்ரீவினோத், கம்பன், கலைவ £ணன் ஆகியோர் இருந்தனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 11:45
 


Page 371 of 519