Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை

Print PDF
தினகரன் 03.02.2010

கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை

சென்னை : மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை தினமும் மேற்கொள்ளப்படுகிறது. 300 கைத்தெளிப்பான்கள், 50 பவர் ஸ்பிரேயர் மூலம் வீடுகளில் உள்ள கிணறு, தண்ணீர் தொட்டிகளிலும் மருந்து தெளிக்கப்படுகிறது.

நீர் வழித் தடங்களில் கொசுக்களை புழுக்கள் நிலையிலேயே ஒழிக்க 10 படகுகளை பயன்படுத்தி மருந்து தெளிக்கப்படுகிறது. மறுநாள், ஒவ்வொரு நூறு மீட்டர் தூரத்திற்கும் நீரை எடுத்து பரிசோதித்து கொசுப் புழுக்கள் அளவு கணக்கிடப்படுகிறது. வீடுகளில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றில் நீர் தேங்கி கொசு உற்பத்தி வழிவகுக்கும் என்பதால் அவற்றை அகற்றி குப்பை தொட்டிகளில் கொட்டும்படிமக்களுக்கு அறிவுறுத்த படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 03 February 2010 11:41
 

பன்றி வளர்ப்பவர்களுக்கு கடலூர் நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன் 03.02.2010

பன்றி வளர்ப்பவர்களுக்கு கடலூர் நகராட்சி எச்சரிக்கை

கடலூர் : சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பன்றிகளை அவற்றை வளர்ப்பவர்கள் அப்புறப்படுத்தாவிட்டால் நாளை முதல் நகராட்சி மூலம் பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையர் குமார் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பு;

கடலூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நகராட்சியால் பிடித்து அப்புறப்படுத்தப்படும். மீறி பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் பன்றி உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பலமுறை இவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பல இடங்களில் பன்றிகள் சுற்றி திரிந்து சுகாதார கேட்டினை ஏற்படுத்துகின்றன. பன்றிகளை பன்றி வளர்ப்பவர்களே அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பொது சுகாதார நலன் கருதி கொள்ளை நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நகராட்சி வாயிலாக நாளை முதல் கடலூர் நகராட்சி மூலம் பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 February 2010 11:08
 

15 வட்டாரங்களில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை

Print PDF
தினமணி 03.02.2010

15 வட்டாரங்களில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை

நாமக்கல், பிப். 2: நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 15 வட்டாரங்களில் வீடுதோறும் சென்று தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன்குனியா, மலேரியா, டெங்கு மற்றும் இதர தொற்று நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 வட்டாரங்களிலும் தலா 10 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வீடுதோறும் சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீர்நிலைகளில் கொசுப் புழுக்களை அழிக்க மருந்து தெளித்தல், வீடுகளில் பயன்படுத்தப்படும் தேக்கி வைத்த தண்ணீரில் அபேட் மருந்து தெளித்தல், கொசுப் புகை அடித்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எருமப்பட்டி வட்டாரத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் வட்டாரத்துக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று அபேட் மருந்து தெளித்து வருகின்றனர்.

தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதுடன், வீடுகளுக்கு அருகிலோ, தெருக்களிலோ தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீடுதோறும் வந்து அபேட் மருந்து தெளிக்கும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சி. சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Last Updated on Wednesday, 03 February 2010 10:44
 


Page 372 of 519