Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கழிப்பறைத் தொட்டியின் காற்றுப் போக்கிகளில் கொசுவலை கட்ட திட்டம்

Print PDF

தினமணி 03.02.2010

கழிப்பறைத் தொட்டியின் காற்றுப் போக்கிகளில் கொசுவலை கட்ட திட்டம்

விழுப்புரம், பிப்.2: விழுப்புரம் நகரில் முதல்கட்டமாக 10 ஆயிரம் வீடுகளில் உள்ள கழிப்பறைத் தொட்டிகளின் (செப்டிக் டேங்க்) காற்றுப் போக்கிகளில் கொசுவலை கட்டும் பணி வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

÷இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியது: அதிகமான கொசுக்கள் இந்த செப்டிக்டேங்க்களில்தான் உற்பத்தியாகிறது என்பதால் அதை கட்டுப்படுத்த, அந்த டேங்குகளில் வைக்கப்பட்டுள்ள காற்றுப் போக்கிகளின் மேல்பகுதியில் கொசுவலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ÷

இதற்காக 20 ஆயிரம் வீடுகளில் கட்ட திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளில் செயல்படுத்தப்படும்.

÷அதே நேரத்தில் விழுப்புரம் நகரை 6 பிரிவாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவில் ஒட்டுமொத்தமாக கொசு மருந்து அடிக்கும் பணியும் தொடங்க உள்ளது. ÷

நகரில் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ள நாய்களை பிடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் விடப்படும். பன்றிகளை சுடுவது குறித்து ஆட்சியரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். ÷பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், மாடுகளை தங்கள் வீடுகளிலேயே கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என்றும், மீறி சாலையில் நடமாடும் மாடுகளை பிடித்து ஓரிடத்தில் அடைக்கப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தண்டோரா போடப்படும் என்று தெரிவித்தார்.

÷நகரில் விநியோகிக்கப்படவுள்ள கொசு வலையை நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ், ஆணையர் சிவகுமாரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலாளர் லட்சுமிநாராயணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரகுபதி, சுரேஷ்பாபு, வினோத், கம்பன், சரவணன், கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 10:41
 

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கொசுஒழிப்பு பணி தொடக்கம்

Print PDF

தினமலர் 03.02.2010

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கொசுஒழிப்பு பணி தொடக்கம்

கீழ்பென்னாத்தூர்:கீழ்பென்னாத்தூர் டவுன் பஞ்.,ல், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கீழ்பென்னாத்தூர் டவுன் பஞ்., பகுதியில் நாளுக்குநாள் பெருகிவரும் கொசு தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி பழனி, மாவட்ட சுகாதார துறைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சித்ரா உத்தரவின்பேரில், மாவட்ட உதவி பூச்சியியல் வல்லுநர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் மேற்பார்வையில், களப்பணியாளர்களால், கொசு ஒழிப்பு புகைபோக்கி மூலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தெரு, தெருவாக சென்று கொசு மருந்து அடிக்கப்பட்டது.

இந்த பணியை டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி பழனி முன்னிலையில், தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்களும் உடனிருந்து மேற்பார்வையிட்டனர்

 

 

Last Updated on Wednesday, 03 February 2010 07:55
 

தொழுநோய் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர் 03.02.2010

தொழுநோய் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி

ஆரணி:உலக தொழுநோய் ஒழி ப்பு தினத்தை முன்னிட்டு, ஆரணியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஆரணி நகராட்சி, மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர், புனிதவளனார் மருத்துவமனை தொழுநோய் பிரிவு இணைந்து ஆரணியில் உலக தொழுநோய் ஒழிப்பு தின பேரணி நடத்தியது. நிகழ்ச்சிக்கு, கமிஷனர் சசிகலா தலைமை வகித்தார். புனித வளனார் மருத்துவமனை தொழுநோய் பிரிவு இயக்குனர் சிறியபுஷ்பம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணை இயக்குனர் ராமலிங்கம் வரவேற்றார்.நிகழ்ச்சியில், வெல் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழுநோய் சுகாதார துணை இயக்குனர் ஜெயபாலன் பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் 200 பேர் தொழு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 160 பேர் பூரணமாக குணமாகியுள்ளனர்.

தொழுநோய் ஒரு பரம்பரை நோய் அல்ல. மற்ற நோய்களை போல் இதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சீக்கிரம் குணமடையலாம். எனவே, தொழுநோய் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தொழுநோய் முற்றிலும் இல்லாமல் ஒழித்து விடலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஆரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ்நிலையம், மார்க்கெட் ரோடு வழியாக சென்று புனித வளனார் மருத்துவமனை அருகே முடிந்தது. இதில், தொழுநோய் விழிப்புணர்வு சம்பந்தமான கோஷங்கள் எழுப்பப்பட்டு, துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் டாக்டர் பாஸ்கர், டவுன் எஸ்.., காண்டீபன், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் சந்திரமோகன் சேகர், செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 07:54
 


Page 373 of 519