Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவுப் பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்த் தடுப்பூசி

Print PDF

தினமணி 20.01.2010

துப்புரவுப் பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்த் தடுப்பூசி

புதுச்சேரி, ஜன. 19: உழவர்கரை நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்த் தடுப்பூசி செவ்வாய்க்கிழமை போடப்பட்டது.

÷இந்நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்காமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது.÷

இப் பணியை உழவர்கரை நகர்மன்றத் தலைவர் என்.எஸ்.ஜெ. ஜெயபால், நகர் நல அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மாதம் 1 டோஸ் வீதம் 3 மாதங்களுக்கு இந்த ஊசி போடப்படும். இதன்படி, இதன் அடுத்த கட்டமாக பிப்ரவரி 18-ம் தேதியும் அதைத் தொடர்ந்து மார்ச் 17-ம் தேதியும் தடுப்பூசி போடப்படும்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:23
 

சுகாதார சீர்கேடு: மூன்று ஓட்டல்களுக்கு சீல்

Print PDF

தினமணி 20.01.2010

சுகாதார சீர்கேடு: மூன்று ஓட்டல்களுக்கு சீல்

சென்னை, ஜன. 19: சென்னையில் பொது நலத்துக்கு பாதகமாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய மூன்று ஓட்டல்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்துக்கு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கழிவுநீர்க் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மூன்று ஓட்டல்கள், கழிவுகளை வடிகட்டாமல் நேரடியாக கழிவுநீர்க் கால்வாயில் இறக்கி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, மனித நுழைவு திறப்பு வழியாக கழிவுநீர் அடிக்கடி வெளியேறி வந்தது. பொது நலத்துக்கு பாதகமாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக மூன்று ஓட்டல்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:

ஏற்கெனவே எழும்பூர் ரயில்நிலையம் எதிரில் இதுபோல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய இரண்டு ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர்கள் முறையாக கழிவுநீர் வடிகால்வாய் அமைத்தவுடன், ஓட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதுபோல் இப்போது சீல் வைக்கப்பட்டுள்ள மூன்று ஓட்டல்களும் கழிவுநீர் வடிகால்வாய்களை முறையாக அமைத்து, சுகாதார அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே ஓட்டல்களை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றார்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:22
 

எண்ணெய் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு

Print PDF
தினமணி 09.01.2010

எண்ணெய் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு

வேலூர், ஜன. 18: வேலூரில் சமையல் எண்ணெய் விற்பனை நிலையங்களில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் குழுவினர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் பயன்பாட்டில் ஏராளமான கலப்படங்கள், தரமற்ற எண்ணெய் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையொட்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் தலைமையில், வேலூர் சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டங்களிலும் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது.

வேலூர் நகரில் தொரப்பாடி, சங்கரன்பாளையம், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை எண்ணெய் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துணை ஆய்வாளர்கள் சுரேஷ், கெüரிசந்தர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சரவண்ராஜ், மன்னப்பன், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணி, புகழேந்தி உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள், சில்லறை வணிகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவற்றின் 500க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த எண்ணெய் மாதிரிகளின் முடிவு வந்ததும் நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினால் எண்ணெய் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Last Updated on Tuesday, 19 January 2010 11:16
 


Page 386 of 519