Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பொங்கல்: கூடுதலாக 1,600 டன் குப்பை

Print PDF

தினமணி 18.01.2010

பொங்கல்: கூடுதலாக 1,600 டன் குப்பை

சென்னை, ஜன. 17: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் கடந்த 4 நாள்களில் கூடுதலாக 1,600 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை கடந்த 4 நாள்களாக சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த 4 நாள்களில் குப்பைகள், கரும்பு சக்கைகள் என அதிக அளவில் குவிந்தன. வழக்கமாக சென்னையில் உள்ள 10 மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு 3,300 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 3, 6, 8, 10 ஆகிய மண்டலங்களில் நீல்மெட்டல் நிறுவனமும் மற்ற 6 மண்டலங்களில் மாநகராட்சி சார்பிலும் குப்பைகள் அகற்றப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையின்போது கூடுதல் குப்பைகள் சேரும் என்பதால் இரவு, பகலாக குப்பை அகற்றும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 4 நாள்களில் தினமும் கூடுதலாக 400 டன் வீதம் 1,600 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 3,700 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் மட்டும் வழக்கத்தைவிட கூடுதலாக 5 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அங்கு 3 டன் குப்பை சேகரிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவிக்கிறது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் அதிக அளவு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர்: அம்பத்தூர் நகராட்சி பகுதியில் வழக்கமாக 235 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் போகிப் பண்டிகையன்று வழக்கத்தைவிட 25 டன் குறைந்து 210 டன் குப்பை சேகரிக்கப்பட்டது.

பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலன்று கூடுதலாக தலா 20 டன் வீதம் குப்பை அகற்றப்பட்டுள்ளது. காணும் பொங்கலன்று கூடுதலாக 5 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் தினமும் 110 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. போகி, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலன்று கூடுதலாக தலா 10 டன் குப்பை அதிகரித்துள்ளது.

பல்லாவரம் நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 100 டன் குப்பை அகற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை தினத்தில் கடந்த 4 நாட்களில் சராசரி 7 முதல் 8 சதவீத குப்பை கூடுதலாக அகற்றப்பட்டது. ஆலந்தூர்: ஆலந்தூர் நகராட்சியைப் பொருத்தவரை நாள்தோறும் 80 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை காலத்தில் தினமும் சராசரி 10 டன் குப்பை கூடுதலாக அகற்றப்பட்டது.

Last Updated on Monday, 18 January 2010 06:47
 

பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் தொடக்கம்: பழனிமாணிக்கம் தகவல்

Print PDF

தினமலர் 18.01.2010

பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் தொடக்கம்: பழனிமாணிக்கம் தகவல்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கூறினார். பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி லயன்ஸ், ரோட்டரி கிளப், ஜூனியர் சேம்பர் சார்பில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியை ராஜாமடத்தில் அமைத்துத் தந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கு பாராட்டு விழா நடந்தது. எம்எல்ஏ ரெங்கராஜன் தலைமை வகித்தார். விழாக் குழுத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் ராஜகோபால், நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம், கிளப் மாவட்ட தலைவர் அருணாசலம், ரோட்டரி மாவட்ட தலைவர் இமானுவேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசியதாவது: எனக்கு இங்கே அளிக்கப்படும் எல்லாப் பாராட்டும் முதல்வருக்குத்தான் சேரும். பொது மக்களுக்காக கேட்கிற எதையும் முதல்வர் தட்டியதில்லை . நல்லது எதுவோ அதை எல்லாம் நிறைவேற்றித் தருவார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் கரை புரண்டு வந்தது. கல்லணையில் 2 லட்சம் கன அடி வெள்ளத்தை கொள்ளிடத்தில் திருப்பி விட்டோம். ஆனால் அதே நேரத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறார்கள் என்று செய்தி வந்ததை பார்த்து விட்டு முதல்வர் கேட்டார். கல்லணைக் கால்வாய் புது ஆற்றுப் பகுதி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும். ஆனால் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டாலே உடைப்பு ஏற்பட்டுவிடுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் எல்லா ஆறுகளுமே இயற்கையானது. ஆனால் கல்லணைக் கால்வாய் புது ஆறு செயற்கை ஆனது. இந்த ஆறு உருவானதற்குப் பிறகு 75 ஆண்டுகளாக எந்த விதமான மராமத்து பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் போய்ச் சேரவில்லை என்பதை சொன்னேன். முதல்வர் ரூ.200 கோடி செலவில் கல்லணைக் கால்வாயை சீரமைக்க உத்தரவிட்டார். தற்போது கல்லணைக் கால்வாயில் விட்டுப்போன வாய்க்கால்களை சீரமைக்க மேலும் ரூபாய் 200 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் உள்ள பள்ளிக்களில் மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.இப்பகுதி மாணவிகள் நீண்ட தூரம் சென்று படிக்க இயலாது என்ற காரணத்தால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் பகுதிகளை உள்ளடக்கிய 40 கிலோ மீட்டருக்குள் ராஜாமடத்தில் அரசு பொறியியல் கல்லூரி அதுவும் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ. 28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தைக் கொணடு வரும் போது அதற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை நகருக்கு புறவழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் தஞ்சைக்கும் மற்ற நகரங்களுக்கும் எளிதில் சென்றடைய லாம். நகரமும் நல்ல வளர்ச்சியடையும். எதிர்காலத்தில் அரசு மட்டுமே மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து விட முடியாது.

பொதுமக்களும் சமூக சேவை சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும். அதிராம்பட்டிணத்திற்கு புதிய பஸ் நிலையம் கட்டவும், காரைக்குடி, மயி லாடுதுறை அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்ப டும்.பட்டுக்கோட்டை நகரம் தஞ்சை , கும்பகோணம் நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி டையும். விரைவில் பட்டுக் கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி தொடங்கப்படும்.இவ்வாறு பழனிமாணிக்கம் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, திருஞான சம்பந்தம், பாலசுப்பிரமணியம், பேரூராட்சித் தலைவர்கள் அப்துல்வகாப், பஷீர் அகமது, அசோக்குமார், பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் பிரியா, பேராசிரியர் ராஜமாணிக்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியகுழு தலைவர் ராஜரத்தினம் மற்றும் பலர் பேசினர். முடிவில் ரகு நன்றி கூறினார்.

Last Updated on Monday, 18 January 2010 06:27
 

அவனியாபுரம் குப்பை மேடுகளை அகற்ற மாநகராட்சியுடன் ஒப்பந்தம்

Print PDF
தினமலர் 18.01.2010

அவனியாபுரம் குப்பை மேடுகளை அகற்ற மாநகராட்சியுடன் ஒப்பந்தம்

அவனியாபுரம் : அவனியாபுரம் நகராட்சி குப்பைகளை, வெள்ளக்கல்லில் கொட்டும் பணி, பொங்கல் நாளன்று துவங்கியது.

நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணியை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் செய்கின்றன. தினமும் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை. தெருக்களின் கடைசிவரை செல்லாமல், ஏதாவது ஒரு இடத்தில் குப்பைவண்டிகள் நிறுத்தப்படுகின்றன. வண்டி நிற்கும் இடத்திற்கு சென்று வீட்டு குப்பைகளை கொட்டவேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு சேகரிக்கும் குப்பைகள், மெயின் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுவதால் செயற்கையாக குப்பைமேடுகள் உருவாகின்றன.

பிரச்னைகள் வரும்போது மட்டும் குப்பைமேடுகள் சில நாட்களில் காணாமல்போகும். இக்குப்பைகளை லாரி மூலம் வில்லாபுரம் ஹவுசிங்போர்டிலிருந்து முத்துப்பட்டி செல்லும் ரோடு, அவனியாபுரம் சுடுகாடு அருகே, பெரியார்சிலை பின்புறம் என கொட்டி தீ வைக்கின்றனர். திடீர்குப்பை மேடுகள், சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளால் கொசு உற்பத்தி அதிகமாகி, தெருவிற்கு குறைந்தது ஐந்து பேருக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சல் ஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ள அவனியாபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி வசதியும் இல்லை. வெள்ளக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கை உபயோகிக்க அனுமதிகோரி அவனியாபுரம் நகராட்சியில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடவடிக்கை இல்லை. தற்போது அது உயிர்பெற்றுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையின் படி, ஒப்பந்தம் உருவாகியுள்ளது. அதன்படி ஆண்டிற்கு இரண்டரை லட்சம் ரூபாயை, மதுரை மாநகராட்சிக்கு அவனியாபுரம் நகராட்சி செலுத்தி, குப்பைகளை கொட்டிக் கொள்ளலாம் என முடிவானது.

பொங்கலன்று நகராட்சி தலைவர் போஸ்முத்தையா, நிர்வாக அதிகாரி ஞானசேகரன், சுகாதார அதிகாரி ஜெயசந்திரன் மேற்பார்வையில் குப்பைகளை வெள்ளக் கல்லில் கொட்டும் பணி துவங்கியது.

Last Updated on Monday, 18 January 2010 06:25
 


Page 389 of 519