Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கும்பகோணம் நகரில் 38 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Print PDF

தினமலர் 12.01.2010

கும்பகோணம் நகரில் 38 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

கும்பகோணம்: கும்பகோணம் நகரில் 38 மையங்களில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட அரையூர் சுப்ரமணிய உடையார் நினைவு மருத்துவமனை வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் தமிழழகன் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் தர்மபாலன், ஆணையர் பூங்கொடி அருமைக்கண்ணு, முதுநிலை நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற மூத்த உறுப்பினர் துரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கும்பகோணம் நகராட்சிகண்கு உட்பட்ட தொடக்க, நடுலை, உயர்லை, மேல்லைப் பள்ளி கள், மருத்துவ மனைகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, கோவில்கள், தேவ லயம், மசூதிகள், அங்கன் வாடி மையங்கள் ஆகிய இடங்களில் 5 வயதிற்குட் பட்ட குழந்தைகளுக்கு 38 மையங்களில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ப்பட்டது. நகர் முழுவதும் நடமாடும் வாகனம் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.இதற்காக பொது சுகாதாரம், நகராட்சி பணியாளர்கள், மருத் துவ பணியாளர்கள், சத்துண வு அமைப்பாளர்கள், ரோட்டரி சங்கத்தினர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் என நூற்றுக்க ண க்கானோர் சிறப்பாக பணியாற்றினர்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:32
 

3.45 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினகரன் 11.01.2010

3.45 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 3.45 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் 1,576 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ரயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடந்தன.

பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த பணியில், 776 சுகாதார துறையினரும், 3,014 சமூக நலத்துறையினரும், தொண்டு நிறுவனங்கள், மாணவ, மாணவிகள், வருவாய் துறையினர் உட்பட மொத்தம் 6,212 பேர் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் முகாம்கள் அமைக்கப்பட்டன. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பொன்.பாண்டியன், ஆணையர் முத்துராமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

முகாமை, ..பி.சிவாஜி எம்.எல்.. தொடங்கி வைத்தார். திமுகவினர் பரசுராமன், ரவி, நந்தகுமார், கவுன்சிலர்கள் ராஜ்குமார், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நகராட்சி முன்னாள் தலைவர் தி.ராசகுமார், கொப்பூரில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
ஆவடி: ஆவடி நகராட்சி சார்பில், 75 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நகராட்சியில் 31,344 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

விழிஞ்சியம்பாக்கம் சுகாதார மையத்தில் முகாமை, நகராட்சி தலைவர் விக்டரி மோகன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் அப்துல் ரகீம், ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி சின்னப்பன், ஆய்வாளர்கள் மோகன், பாஸ்கர், சுருளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* அம்பத்தூர் நகராட்சியில் 72 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. 44,211 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அம்பத்தூர் பஸ் நிலையத்தில் நடந்த முகாமை, நகராட்சி ஆணையாளர் ஆசிஷ்குமார் தொடங்கி வைத்தார். சுகாதார அதிகாரி மணிமாறன், கவுன்சிலர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை, .எஸ்.எஸ்.ராமன் எம்.எல்.. தொடங்கி வைத்தார். திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் ஏ.வி.சக்கரப்பன், மாநில கைத்தறி வளர்ச்சிக்கழக இயக்குனர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் அண்ணாமலை, தேசப்பன், செவிலியர் புஷ்பா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சொரக்காய்பேட்டை ஆரம்ப சுகாதாரம் நிலையம் சார்பில், 27 மையங்களில் 5,011 குழந்தைகளுக்கும், அத்திமாஞ்சேரிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 36 மையங்களில் 4,747 குழந்தைகளுக்கும், ஆர்.கே.பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 24 மையங்களில் 3,205 குழந்தைகளுக்கும், அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 23 மையங்களில் 3,171 குழந்தைகளுக்கும், வங்கனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 20 மையங்களில் 2,949 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Last Updated on Monday, 11 January 2010 12:20
 

சுகாதார துறையினர் டயர் கடைகளில் ஆய்வு

Print PDF

தினமலர் 11.01.2010

சுகாதார துறையினர் டயர் கடைகளில் ஆய்வு

கள்ளக்குறிச்சி : மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள டயர் கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் சிக் குன் குனியா, டெங்கு காய்ச்சல் உட்பட பல நோய்களை தடுக்க பூச்சியியல் வல்லுனர் பழனிசாமி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதய ராஜ், ஆய்வாளர் மகாலிங்கம், கணேசன் மற்றும் களப் பணியாளர்கள் குழுவினர் கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் மற்றும் சேலம் சாலையில் உள்ள டயர் கடைகள் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் செய்யும் கடைகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தவும், கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். டயர் கடைகளில் உள்ள பழைய டயர்களை அப்புறப்படுத்தவும், மழை நீர் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினர். பொதுமக்கள் தங்களது வீடுகளை சுற்றிலும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

Last Updated on Monday, 11 January 2010 10:56
 


Page 392 of 519