Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நவீன குளியலறை திறப்பு

Print PDF

தினமலர் 11.01.2010

நவீன குளியலறை திறப்பு

மதுரை : மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 27 வது வார்டு, முரட்டன்பத்திரி பகுதியில், நவீன கழிப்பறை மற்றும் குளியலறையை கமிஷனர் எஸ்.செபாஸ்டின் முன்னிலையில், மேயர் தேன்மொழி திறந்து வைத்து பேசியதாவது:ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் தற்போது 4000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 15,000 பயனாளிகளுக்கு, கான்கீரிட் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறை, குளியலறைகளை பொது மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.மேற்கு மண்டலத் தலைவர் நாகராஜன், தலைமை பொறியாளர் சக்திவேல், உதவிகமிஷனர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சாமி கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 11 January 2010 10:52
 

1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமலர் 11.01.2010

1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

மதுரை : இளம்பிள்ளை வாதத்தை தடுக்க, மதுரையில் 1867 மையங்களில், 5 வயதிற் குட்பட்ட மூன்று லட்சம் குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.தினமலர் அலுவலகத்தில், மாநகராட்சி டாக்டர் ஜெயமணி, நர்சுகள் கலாராணி, பிருந்தா ஆகியோர் சொட்டு மருந்து வழங்கினர். மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில், துறைத் தலைவர் டாக்டர் அமுதா ராஜேஸ்வரி தலைமையில் டீன் சிவக்குமார் வழங்கினார். விடுபட்டவர்களுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் வரை வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கப்படுகிறது. சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி தலைமையில், சுகாதாரம் மற்றும் சத்துணவு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 6675 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரைக்கு வந்த 541 வெளிமாநிலத்தவர் குழந்தைகள், 698 இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தலைமையில், மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 267 மையங்களில் வழங்கப்பட்டது. நடமாடும் குழுக்கள் மூலம், நாடோடிகள், அகதிகள், கட்டட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Last Updated on Monday, 11 January 2010 10:50
 

மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம் உதயம்

Print PDF

தினமலர் 11.01.2010

மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம் உதயம்

கோவை : கோவையை தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் நேற்று உதயமானது.

இச்சங்க துவக்க விழா, கோவை, தாமஸ்கிளப்பில் நேற்று நடந்தது. கோவை மாநகராட்சி கண்காணிப்பாளர் சுப்ரமணியன் பேசியதாவது: தமிழக மாநகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல சங்கங்கள் உள்ளன. மாநகராட்சியில் பணிபுரியும் அமைச்சு பணியாளருக்கும் தனியாக சங்கம் அமைக்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

துணைக்கமிஷனர், வார்டு அலுவலகம், பணி அமைப்பு, வருவாய், கணக்கு பிரிவில் பணியாற்றுவோர், உதவிக் கமிஷனர்கள், மன்ற சட்ட அலுவலர், நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர், மாநகராட்சி சுருக்கெழுத்தர், உதவியாளர், நேர்முக உதவியாளர், கணக்கர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரிவசூலர், துப்புரவு கண்காணிப்பாளர் ஆகிய பணிகளை மேற்கொள்வோர் இச்சங்கத்தில் உறுப்பினராக சேரலாம்.

ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய பலன்களை எளிதாக பெறவும், ஓய்வூதியர் உரிமைகளை பெறும் வகையிலும் தொடர்ந்து உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்படுவர். இச்சங்கம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் கீழ் செயல்படும்.

அனைத்து மாநகராட்சி பணியாளர்களை, அரசு பணியாளர்களாக்கவும், அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநகராட்சி பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கவும், அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதற்கும் சங்கம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, சுப்ரமணியன் பேசினார்.

விழாவில், கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து துறையை சார்ந்த பணியாளர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 11 January 2010 10:36
 


Page 393 of 519