தினமலர் 06.01.2010
துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நல வாரியத்தில் உறுப்பினராக சேர துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி ஆகியவற்றில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப்பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் வரும் 9ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் நலவாரியத்தில் பதிவு செய்யாத பணியாளர்கள் பதிவு செய்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.