தினமலர் 26.12.2009
நுகர்வோர் அமைப்புகளுடன் சுகாதார பிரிவினர் ஆலோசனை
கம்பம் : பொது சுகாதாரத்தை மேம்படுத்த நுகர்வோர் அமைப்புகளுடன் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த உள்ளூரில் உள்ள நுகர்வோர் அமைப்பு களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெட்காட் அமைப்பின் மாநில செயலாளர் புதுராசா உட்பட நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
காலியாக உள்ள துப்புரவு பணியாளர் இடங் களை நிரப்பவேண்டும். துப்புரவு பணிகள் தொய் வின்றி நடக்க ஆவண செய்ய வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
சுகாதார அலுவலர் ஜெயராமன் பேசுகையில்; குடியிருப்பு தெருக்கள், ரோடுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சுகாதார பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார்.