Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நுகர்வோர் அமைப்புகளுடன் சுகாதார பிரிவினர் ஆலோசனை

Print PDF

தினமலர் 26.12.2009

நுகர்வோர் அமைப்புகளுடன் சுகாதார பிரிவினர் ஆலோசனை

கம்பம் : பொது சுகாதாரத்தை மேம்படுத்த நுகர்வோர் அமைப்புகளுடன் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த உள்ளூரில் உள்ள நுகர்வோர் அமைப்பு களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பெட்காட் அமைப்பின் மாநில செயலாளர் புதுராசா உட்பட நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

காலியாக உள்ள துப்புரவு பணியாளர் இடங் களை நிரப்பவேண்டும். துப்புரவு பணிகள் தொய் வின்றி நடக்க ஆவண செய்ய வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
சுகாதார அலுவலர் ஜெயராமன் பேசுகையில்; குடியிருப்பு தெருக்கள், ரோடுகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சுகாதார பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார்.

Last Updated on Saturday, 26 December 2009 10:51
 

ராமேசுவரத்தில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், பிளாஸ்டிக் பை அழிப்பு

Print PDF

தினமணி 26.12.2009

ராமேசுவரத்தில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், பிளாஸ்டிக் பை அழிப்பு

ராமேசுவரம், டிச.25: ராமேசுவரத்தில் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து வெள்ளிக்கிழமை அழித்தனர். 2004-

ம் ஆண்டு முதல் ராமேசுவரம் தீவில் பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது ராமேசுவரம் தீவு பகுதியில் குறிப்பாக ராமேசுவரம் கோயிலைச் சுற்றி பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகள் தடையின்றி விற்பனை செய்யபடுகிறது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் பாலதீன் ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் துணை ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.

கோட்டாட்சியர் இளங்கோ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாசில்தார் ராஜாராமன், நகராட்சி ஆணையர் போஸ், நுகர்வோர் இயக்க மாநில பொருளாளர் ஜெயகாந்தன், ராமேசுவரம் நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், ரோட்டரி சங்கத் தலைவர் சந்திரன், அரிமா சங்கத் தலைவர் டோமினிக்ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாலிதீன் பை, கப் மற்றும் போதை பாக்குகளை ஒழிப்பது குறித்தும், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தலைமை எழுத்தர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் கோயில் கீழவாசல் பகுதியில் கடைகளில் நடத்திய சோதனையில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பை, கப் மற்றும் போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.

இதனை தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.

 

பொது சுகாதாரம்: ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி 24.12.2009

பொது சுகாதாரம்: ஆலோசனைக் கூட்டம்

பழனி டிச. 23: பழனி நகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் குறித்து விடுதி, கடை உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனியில் தற்போது திருவிழா சீசன் துவங்கிவிட்டபடியால் அடிவாரம் பகுதியில் ஏராளமான சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது சுகாதாரம் குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்திக் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மண்டபம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் உணவுக் கழிவுகளை அவர்கள் தங்கள் வளாகத்திலேயே பெரிய தொட்டிகள் மூலம் வைத்து தினமும் வரும் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம் அல்லது தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளின் உள்ளே போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

குப்பைத் தொட்டிக்கு வெளியே போட்டால் ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை ஸ்பாட் பைன் வசூலிக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேநீர் கடைகளல் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்த்து அட்டை கப்புகள் பயன்படுத்த வேண்டுமென்றும் மீறி பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரப் பணிகளில் தினமும் 16 மணி நேரம் கூடுதல் சுகாதாரப் பணியாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ருத்ரபதி, சுகாதார ஆய்வர்கள் மணிகண்டன், சையது அபுதாகீர், நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 10:45
 


Page 410 of 519