Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசுக்களை அழிக்க புது மெஷின் வந்தாச்சு

Print PDF

தினமலர் 24.12.2009

கொசுக்களை அழிக்க புது மெஷின் வந்தாச்சு

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் கொசுத்தொல்லைக்கு தீர்வு காண, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 3.20 லட்சம் ரூபாய் செலவில் "மைக்ரோ போக்' என்ற புதிய மெஷின் வாங்கப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறுகையில், ""மைக்ரோ போக் மெஷினை ஸ்டார்ட் செய்ய மட்டும் பெட்ரோல் தேவை. பின், டீசலுடன் "ஸ்பேரி திரியம் இரண்டு சதவீதம்' என்ற திரவம் கலக்கப்படுகிறது. இதில் இருந்து வெளிவரும் புகை, தெருக்கள் மற்றும் கழிவு நீர் தேங்கியுள்ள இடங் களில் அடிக்கப்படும். இதுதவிர, பராமரிக்கப் படாமல் கிடக்கும் குட்டை மற்றும் கொசுக்கள் பரவும் இடங்களின் மீது தெளிக்கப்படும். ""மைக்ரோ போக் மெஷினில் "அபேட்' என்ற திரவம் நிரப்பி, புகை வெளிவரச்செய்து, பயன் படுத்த முடியும். "அபேட்' கலக்கப்பட்டு வெளிவரும் புகை, வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாசி படரும் இடங்கள், பொது குடிநீர் குழாய் உள்ள இடங்களில் அடிக்கப்பட உள்ளது. இதனால், நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் முழுவதும் அழிந்து விடும்,'' என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 09:38
 

வியாபாரிகளிடம் 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினகரன் 24.12.2009

வியாபாரிகளிடம் 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கலப் பட பால் விற்பனையா வதை தடுக்க நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் ஆலோசனைபடி, நகரா ட்சி சுகாதார ஆய்வாளர் கள் அறிவழகன், சுரேஷ், பிச்சமுத்து, ராதா, ராமை யன், டேவிட் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை நகரில் கேன் கன் மூலம் பால் விற்பனை செய்யும் வியாபாரிகளை சோதனையிட்டனர்.

65 பேரிடம் நடத்திய சோதனையில் 30 பேர் பால் விற்பனை உரிமமி ன்றி வியாபாரம் செய்தது தெரியவந்தது. அவர்களிடம் உரிமத்தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் 300 லிட்டர் கலப்படம் உள்ளதாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சில்லரைக்கு பால் விற்பவர்கள் வரும் 31ம் தேதிக்குள் உரிமம் எடுக்க அறிவுறுத்தப்பட் டது.

Last Updated on Thursday, 24 December 2009 06:24
 

போலியோ சொட்டு மருந்து வழங்க முன்னேற்பாடு தீவிரம்

Print PDF

தினகரன் 24.12.2009

போலியோ சொட்டு மருந்து வழங்க முன்னேற்பாடு தீவிரம்

திருப்பூர்: போலியோ சொட்டு மருந்து முதல் கட்ட முகாம் வரும் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.

நாடுமுழுவதும் போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாட்டு பணி தற்போது துவங்கியுள்ளது. கடந்தாண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் போது வீண் புரளியால் ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகள் இந்தாண்டு தொடராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி, மாநகர நல அலுவலர் ஜவஹர்லால் ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 50 ஆயிரம் குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்தாண்டை போலவே 79 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தவிர பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், தெருவோர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக நடமாடும் மையங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தெருவோர குழந்தைகள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 400 பேரை பணியில் ஈடுபடுத்தப்பட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இதற்கான பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி மேற்கொண்டு வருகிறார்.

மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 1000க்கும் அதிகமான முகாம்களை அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடந்து வருகிறது.வதந்திகளை தடுக்கசிறப்பு பிரசாரம்போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறையினருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. விழிப்புணர்வு பிரசாரத்தில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆட்டோ உள்ளிட்ட வாகன பிரசாரங்களில் வதந்திகளை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

வதந்தி காரணமாக திருப்பூர் சுகாதார மாவட்டத்தில் கடந்தாண்டு முதல் தவணையில் 75 சதவீத குழந்தைகள் மட்டுமே போலியோ சொட்டு மருந்து ட்டுக்கொண்டனர்.இந்நிலையில், நடப்பாண்டு 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Last Updated on Thursday, 24 December 2009 06:20
 


Page 412 of 519